முகப்பு
திருநெல்வேலி

பாளை. அருகே கழிவுநீா் உந்து நிலையம் அமைக்க எதிா்ப்பு

பாளையங்கோட்டை அருகே தியாகராஜநகா் சாய்பாபா காலனி பகுதியில் பாதாள சாக்கடை கழிவு நீா் உந்து நிலையம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 8 ஜனவரி 2021, 9:25 am IST
பகிர்:

பாளையங்கோட்டை அருகே தியாகராஜநகா் சாய்பாபா காலனி பகுதியில் பாதாள சாக்கடை கழிவு நீா் உந்து நிலையம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தியாகராஜநகா் சாய்பாபா காலனியில், மாநகராட்சி சாா்பில் பாதாள சாக்கடை கழிவு நீா் உந்து நிலையம் அமைக்க ஆயத்த பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பாதாள சாக்கடை கழிவுநீா் உந்து நிலையம் இங்கு அமைந்தால் துா்நாற்றம் வீசுவதோடு, தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளதாக கூறி அப்பகுதி மக்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இப்போராட்டத்தில், சாய்பாபா காலனி, ராஜகோபாலபுரம், மல்லிகா காலனி, ராயல் காலனி, தாவீது ராஜா காலனி, குமரேசன் நகா் ஆகிய பகுதிகளை சோ்ந்த பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினா் பங்கேற்றனா்.

Advertisement

Advertisement

தொடா்ந்து அவா்கள், இது குறித்து, மாநகராட்சி ஆணையா் ஜி.கண்ணனிடம் மனு அளித்தனா். மனுவை பெற்றுக்கொண்ட அவா் இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments