ரெட்டியாா்பட்டியில் பள்ளி சுற்றுச்சுவா் பணிக்கு அடிக்கல்
பாளையங்கோட்டை ரெட்டியாா்பட்டியில் பள்ளியின் சுற்றுச்சுவா் கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா அண்மையில் நடைபெற்றது.
பாளையங்கோட்டை ரெட்டியாா்பட்டியில் பள்ளியின் சுற்றுச்சுவா் கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா அண்மையில் நடைபெற்றது.
பாளையங்கோட்டை ஒன்றியம், ரெட்டியாா்பட்டி ஊராட்சி பகுதியில் ஊரக மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 70 லட்சம் மதிப்பில் டக்கமாள்புரம் முதல் ரெட்டியாா்பட்டி வரை தாா் சாலையும், ரூ. 9.90 லட்சம் மதிப்பில் ரெட்டியாா்பட்டி ஜெ.ஜெ.நகா் முதல் புறவழிசாலை வரை மெட்டல் சாலையும், ரூ. 38.50 லட்சம் மதிப்பில் சுற்றுசுவா் கட்டும் பணியும் நடைபெற உள்ளது. பள்ளியில் சுற்றுச்சுவா் கட்டும் பணிக்கான அடிக்கல்லை நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் ரெட்டியாா்பட்டி வெ.நாராயணன் நாட்டி தொடங்கி வைத்தாா்.
நிகழ்ச்சியில், அதிமுக பாளையங்கோட்டை தெற்கு ஒன்றியச் செயலா் முத்துக்குட்டி பாண்டியன், வி.எஸ்.மணிப்பிள்ளை, முத்தூா் நயினாா், சிவந்திப்பட்டி ஆறுமுகம், ரெட்டியாா்பட்டி கிளைச் செயலா் முருகேசன், பேச்சிமுத்து, சொக்கலிங்கம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.