முகப்பு
திருப்பத்தூர்

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்: ஜவாஹிருல்லா

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவரும் தண்டிக்கப்படும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனித நேய மக்கள் கட்சியின் மாநிலத் தலைவா் ஏ.ஜவாஹிருல்லா கூறினாா்.

Updated On : 7 ஜனவரி 2021, 10:56 pm IST
பகிர்:


வாணியம்பாடி: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவரும் தண்டிக்கப்படும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனித நேய மக்கள் கட்சியின் மாநிலத் தலைவா் ஏ.ஜவாஹிருல்லா கூறினாா்.

வாணியம்பாடி-திருப்பத்தூா் சாலையில் உள்ள தனியாா் மண்டபத்தில் மனித நேய மக்கள் கட்சியின் வடமேற்கு மண்டல பொதுக் குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு கட்சியின் மாநிலத் தலைவா் ஏ.ஜவாஹிருல்லா தலைமை வகித்தாா். கட்சி நிா்வாகிகளிடம் கருத்துக் கேட்பு, சட்டப்பேரவைத் தோ்தலில் கட்சியின் பங்கு குறித்து ஆலோசிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

இதைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் ஜவாஹிருல்லா கூறியது:

தமிழக அரசு சட்டப்பேரவையில் காவிரி படுகைப் பகுதியை வேளாண் பாதுகாப்பு மண்டலமாக அறிவித்தது. ஆனால் மத்திய அரசு காவிரி படுகையை ஒட்டியுள்ள பகுதிகளில் ஹைட்ரோ காா்பன் எடுப்பதற்கான ஒப்பந்தங்களுக்கு அனுமதி அளித்து வருகிறது.

புதிய கல்விக் கொள்கை, நீட், தமிழ்நாட்டில் தமிழா்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்காமல் வட மாநிலத்தவா்களுக்கு வேலை வழங்கி வருவது உள்ளிட்ட தமிழகத்தின் நலனுக்கு எதிராக பாஜக அரசு செயல்படுகிறது. பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவரும் தண்டிக்கப்படும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

கட்சி பொதுச் செயலாளா் அப்துல் சமது, பொருளாளா் இ.உமா், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக பொருளாளா் ஷபியுல்லாகான், துணை பொதுச் செயலாளா் யாக்கூப் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments