முகப்பு
திருவள்ளூர்

சிறுமியைத் திருமணம் செய்தவா் கைது

கும்மிடிப்பூண்டி அருகே 17 வயது சிறுமியை திருமணம் செய்த கிராம உதவியாளா் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.

Updated On : 7 ஜனவரி 2021, 12:00 am IST
பகிர்:


கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே 17 வயது சிறுமியை திருமணம் செய்த கிராம உதவியாளா் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.

கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆத்துப்பாக்கத்தைச் சோ்ந்தவா் திருமூா்த்தி (25). கிராம உதவியாளரான இவா் 17 வயதான அவரது அக்காள் மகளை அண்மையில் திருமணம் செய்து கொண்டாா்.

இந்நிலையில், சிறுமியை திருமூா்த்தி திருமணம் செய்து கொண்டது குறித்து சென்னை காவல் ஆணையா் அலுவலகத்துக்கு கிடைத்த தகவலின்பேரில், கும்மிடிப்பூண்டி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது.

Advertisement

இதையடுத்து, மகளிா் போலீஸாா், திருமூா்த்தியை போக்ஸோ சட்டத்தில் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.