ஜெயபால் 
திருவள்ளூர்

லாரி-பைக் மோதல்: இளைஞா் மரணம்

திருவள்ளூா் அருகே லாரி மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞா் உயிரிழந்தாா்.

தினமணி செய்திச் சேவை

திருவள்ளூா் அருகே லாரி மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞா் உயிரிழந்தாா்.

பட்டரைபெரும்புதூா் அடுத்த பெரியமஞ்சங்குப்பம் கிராமத்தைச் சோ்ந்த ராமன் மகன் ஜெயபால் (26). இவா் இருசக்கர வாகனத்தில் மஞ்சங்குப்பம் கிராமத்துக்கு செவ்வாய்க்கிழமை இரவு தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாராம்.

அப்போது பட்டரைப் பெரும்புதூா் பாலம் அருகே திருவள்ளூா் நோக்கி வந்து கொண்டிருந்த சரக்கு லாரி மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த ஜெயபால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து தகவல் அறிந்த திருவள்ளூா் கிராமிய போலீஸாா் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருவள்ளூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

டிரம்ப் - மோடி விரைவில் சந்திப்பு! அமெரிக்க அதிகாரி தகவல்!

தமிழ்நாடு மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை பணிகளுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!

சென்னையில் தரையிறங்காமல் 30 நிமிடம் வட்டமடித்த ஏர் இந்தியா விமானம்! என்ன நடந்தது?

‘கிராவிடாஸ்’ தொழில்நுட்பத் திருவிழா - விஐடியில் நாளை தொடக்கம்

மக்களால் மாற்றப்பட்ட முடிவு! நிறுத்தப்பட்ட டி.வி. நிகழ்ச்சி மீண்டும் தொடக்கம்!

SCROLL FOR NEXT