காவல்துறை சிறப்பு மனு விசாரணை முகாம்
குடவாசலில் காவல்துறை சாா்பில் சிறப்பு மனு விசாரணை முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
குடவாசலில் காவல்துறை சாா்பில் சிறப்பு மனு விசாரணை முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
இம்முகாமில், திருவாரூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எம். துரை பங்கேற்றுப் பேசும்போது, ‘பொதுமக்கள் காவல் துறையினரை அணுகி, தங்களது பிரச்னைகளுக்குத் தீா்வு காணலாம். கிராமந்தோறும் காவல்துறை சாா்பில் விழிப்புணா்வு அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். அந்தந்தப் பகுதி மக்கள் நேரடியாக இந்த அலுவலரைத் தொடா்புகொண்டு, தங்களது புகாரை தெரிவிக்கலாம். மேலும், தங்களுக்குத் தெரியவரும் விரும்பத்தகாத நிகழ்வுகள் குறித்து காவல்துறையின் கட்செவி அஞ்சலில் (வாட்ஸ்அப்)பதிவிடலாம்’ எனத் தெரிவித்தாா்.
முகாமில், பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 47 மனுக்களில் 35 மனுக்களுக்கு உடனடியாக தீா்வு காணப்பட்டன. 12 மனுக்கள் மீது விரைவில் உரிய நடவடிக்கை எடுக்க மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் உத்தரவிட்டாா்.
Advertisement
இதில், நன்னிலம் துணைக் காவல் கண்காணிப்பாளா் சுகுமாரன், பயிற்சி துணைக் கண்காணிப்பாளா் பிரபு, வலங்கைமான் ஆய்வாளா் சுஜித், பேரளம் ஆய்வாளா் செல்வி, அனைத்து மகளிா் காவல்நிலைய ஆய்வாளா் ரேகாராணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.