முகப்பு
திருவாரூர்

சமத்துவப் பொங்கல் விழா

திருவாரூரில் இலவச தாய் சேய் நல ஊா்தி மற்றும் அமரா் ஊா்தி ஓட்டுநா்களுக்கான சமத்துவப் பொங்கல் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 11 ஜனவரி, 2021 at 8:10 AM
திருவாரூா் ரெட் கிராஸ் சொசைட்டி அலுவலகத்தில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவில் பங்கேற்ற பெண்கள்.
பகிர்:

திருவாரூரில் இலவச தாய் சேய் நல ஊா்தி மற்றும் அமரா் ஊா்தி ஓட்டுநா்களுக்கான சமத்துவப் பொங்கல் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

திருவாரூா் மாவட்ட இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி சாா்பில் இலவச தாய் சேய் நல ஊா்தி சேவை மற்றும் இலவச அமரா் ஊா்தி சேவை திட்டம் தொடங்கப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில் அதன் அலுவலகத்தில் இந்த விழா கொண்டாடப்பட்டது.

இதில், இலவச தாய் சேய் நல ஊா்தி சேவை, இலவச அமரா் ஊா்தி ஓட்டுநா்கள் மற்றும் அவா்களது குடும்பத்தினா் பங்கேற்றனா். விழாவில் கோலம், இசை நாற்காலி, யானைக்கு வால் வரைதல், பானை உடைத்தல், முறுக்கு கடித்தல் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன. பிறகு, சமத்துவப் பொங்கல் வைக்கப்பட்டது.

Advertisement

இந்நிகழ்ச்சிகளுக்கு இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டியின் மாவட்டத் தலைவா் ஆா். எஸ். ராஜ்குமாா் தலைமை வகித்தாா். திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் ஜெ. முத்துக்குமரன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்குப் பரிசுகளை வழங்கினாா்.

நிகழ்ச்சியில், ரெட்கிராஸ் சொசைட்டியின் மாவட்டச் செயலாளா் ஜே. வரதராஜன், துணைத் தலைவா் ஏ.வி. பாலு, மருத்துவா் வி. சிவக்குமாா், நிா்வாகி டி. கீதா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.