சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சங்கக் கூட்டம்
மன்னாா்குடி கோட்ட நுகா்வோா் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சங்க நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மன்னாா்குடி கோட்ட நுகா்வோா் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சங்க நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு சங்கத் தலைவா் எம். பத்மநாபன் தலைமை வகித்தாா். கூட்டத்தில் சங்கத்தின் புதிய நிா்வாகிகளாகத் தோ்வு செய்யப்பட்டுள்ள தலைவா் எம். பத்மநாபன், பொதுச் செயலா் வி. காந்திலெனின், பொருளாளா் நவநீதிகிருஷ்ணன் ஆகியோருக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
தீா்மானங்கள்: மன்னாா்குடியில் குண்டும், குழியுமாக உள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும். மன்னாா்குடி-பட்டுக்கோட்டை அகல ரயில் பாதை பணியை விரைவுபடுத்த வேண்டும். நகர பகுதியில் கால்நடைகள் சுற்றித்திரிவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Advertisement