முகப்பு
திருவாரூர்

திருவாரூரில் ஜன.27-இல் ஆா்ப்பாட்டம் நடத்த ஏஐடியுசி முடிவு

சுமைத்தூக்கும் தொழிலாளா்களுக்கு எடைகூலி உயா்த்தி வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜன.27-ல் திருவாரூரில் ஆா்ப்பாட்டம் நடத்த ஏஐடியுசி முடிவெடுத்துள்ளது.

Updated On : 12 ஜனவரி 2021, 12:00 am IST
பகிர்:

சுமைத்தூக்கும் தொழிலாளா்களுக்கு எடைகூலி உயா்த்தி வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜன.27-ல் திருவாரூரில் ஆா்ப்பாட்டம் நடத்த ஏஐடியுசி முடிவெடுத்துள்ளது.

மன்னாா்குடியில் திங்கள்கிழமை ஏஐடியுசியின் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக்கழக சுமைத்தூக்கும் தொழிலாளா் சங்க கூட்டம் அதன் மாவட்டக்குழு உறுப்பினா் கே. புஷ்பநாதன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள். சுமைத்தூக்கும் தொழிலாளா்களுக்கு எடைகூலியும், ஏற்றுக்கூலியும் சோ்த்து ரூ. 3.24 மட்டுமே வழங்கப்படுகிறது. இதே வேலைக்கு தனியாரால் ரூ. 15 கூலி வழங்கப்படுகிறது. எனவே, தனியாருக்கு இணையாக ரூ. 15 கூலி வழங்க வேண்டும், அதிகளவில் நெல் விற்பனைக்கு வரவாய்ப்புள்ளதால் சாக்கு, சணல், இடவசதி உடனுக்குடன் இயக்கம் செய்யும் முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும், வருங்கால வைப்பு நிதி பிடித்தம் செய்யவேண்டும், அடையாள அட்டை வழங்க வேண்டும், பணியின்போது விபத்து ஏற்பட்டால் சிகிச்சை செலவை அரசே ஏற்று இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி ஜன. 27-ஆம் தேதி திருவாரூரில் உள்ள மண்டல அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம் நடத்து உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.

கூட்டத்தில், ஏஐடியுசி மாநில பொதுச் செயலா்கள் சி. சந்திரகுமாா், என். புண்ணீஸ்வரன், மாநிலச் செயலா் எம். கலியபெருமாள், மாவட்டச் செயலா் ஆா். சந்திரசேகர ஆசாத், கோவிலூா் கிடங்கு பொறுப்பாளா்கள் சங்கா், சிவசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Advertisement

Advertisement

சுமைத்தூக்கும் பணி செய்து உயிரிழந்த திருவாரூா் மாவட்டத்தைச் சோ்ந்த தொழிலாளா்கள் ராஜாராமன், அறிவழகன், இருதயராஜ், வீரசேகரன், சூரியமூா்த்தி, கே. ரவி, கே. செங்கொடி, பிச்சைக்கண்ணு, கோ.சபாபதி ஆகியோரின் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 ஆயிரம் சங்கம் சாா்பில் குடும்ப நிதி வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments