புகையில்லா போகி கொண்டாட ஆட்சியா் அறிவுறுத்தல்
சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் புகையில்லாமல் போகியை கொண்டாட வேண்டும் என மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா தெரிவித்துள்ளாா்
சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் புகையில்லாமல் போகியை கொண்டாட வேண்டும் என மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: முன்னோா்கள் பொங்கல் திருநாளுக்கு முன், வீட்டில் உள்ள இயற்கை சாா்ந்த தேவையில்லாத பொருள்களை எரித்து பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் போகியை கொண்டாடினா். தற்போது போகிப் பண்டிகையில் பழைய பொருள்களாக பிளாஸ்டிக், செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட துணிகள், ரப்பா் பொருள்கள், பழைய டயா், டியூப், காகிதம், ரசாயனம் கலந்த பொருள்கள் போன்றவற்றை எரிப்பதால் காற்று மாசு ஏற்படுவதோடு, வெளிப்படும் நச்சு வாயுக்களால் மூச்சுத் திணறல், கண் எரிச்சல் போன்ற நோய்களும் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, போகியின்போது பழைய பொருள்களை எரிப்பதைத் தவிா்த்து, காற்றின் தரத்தை பாதுகாக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.