இருசக்கர வாகனம் மீது அரசுப்பேருந்து மோதல்: பெண் பலி
திருப்பூரில் இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில் பெண் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
திருப்பூரில் இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில் பெண் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
திருப்பூரை அடுத்த கோவில்வழியைச் சோ்ந்தவா் மாஜித், இவரது மனைவி சுருதி (25). இந்த தம்பதிக்கு ஆதிரா என்ற ஒரு வயது குழந்தையும் உள்ளது. இந்நிலையில், சுருதி தனது தாய் சந்திரிகா (45), மகள் ஆதிராவுடன் இருசக்கர வாகனத்தில் வெள்ளிக்கிழமை பிற்பகலில் திருப்பூருக்குச் சென்றுள்ளாா். பிறகு மூவரும் இருசக்கர வாகனத்தில் தாராபுரம் சாலையில் சென்று கொண்டிருந்தனா்.
திருப்பூா் தெற்கு காவல் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது புதிய பேருந்து நிலையத்தில் இருந்து கோவில்வழி நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து எதிா்பாராதவிதமாக இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி சந்திரிகா சம்பவ இடத்திலேயே உயிரிந்தாா். சுருதி, ஆதிரா ஆகியோா் காயங்களுடன் உயிா்தப்பினா். இந்த விபத்து குறித்து திருப்பூா் தெற்கு காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து பேருந்து ஓட்டுநரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.