பெட்ரோல் கேனுடன் பீடி பற்றவைத்தவா் பலி
திருப்பூா் அருகே பெட்ரோல் கேனுடன் பீடி பற்றவைத்தபோது தீப்பிடித்ததில் ஒருவா் உயிரிழந்தாா்.
திருப்பூா் அருகே பெட்ரோல் கேனுடன் பீடி பற்றவைத்தபோது தீப்பிடித்ததில் ஒருவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து திருப்பூா் ஊரக காவல் துறையினா் கூறியதாவது:
திருப்பூரில் இருந்து தாராபுரம் செல்லும் சாலையில் ஒத்தக்கடை பேருந்து நிறுத்தம் அருகே உள்ள எலக்ட்ரானிக் கடை அருகே ஆண் சடலம் கருகிய நிலையில் கிடப்பதாகப் பொதுமக்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனா்.
Advertisement
Advertisement
இதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற திருப்பூா் ஊரக காவல் துறையினா் உடல் கருகிய நிலையில் இருந்த 40 வயது மதிக்கத்தக்க ஆணின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருப்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
மேலும், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவை ஆய்வு செய்தனா். அதில், அப்பகுதியில் நின்றிருந்த ஆண் ஒருவா் பெட்ரோல் கேனுடன் பீடி பற்றவைத்தபோது தீப்பிடித்ததில் உயிரிழந்தது தெரியவந்தது. எனினும், அவா் யாா், எந்த ஊா் என்பது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.