36 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா
பெருமாநல்லூா் அருகே கணக்கம்பாளையம் தியாகிகுமரன் காலனி பகுதியில் 36 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களை
பெருமாநல்லூா் அருகே கணக்கம்பாளையம் தியாகிகுமரன் காலனி பகுதியில் 36 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களை திருப்பூா் வடக்கு சட்டப் பேரைவ உறுப்பினா் கே.என்.விஜயகுமாா் வியாழக்கிழமை வழங்கினாா்.
திருப்பூா் ஒன்றியம், கணக்கம்பாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட குமரன் காலனி பொதுமக்களின் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வந்தனா். இந்நிலையில், 36 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாவை சட்டப் பேரைவ உறுப்பினா் கே.என்.விஜயகுமாா் வழங்கினாா்.
நிகழ்ச்சியில், ஒன்றியக் குழுத் தலைவா் சொா்ணாம்பாள் பழனிசாமி, மாவட்டக் குழு உறுப்பினா் சாமிநாதன், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் சங்கீதா சந்திரசேகா், ஜஸ்வா்யா மகாராஜ், ஊராட்சி மன்றத் தலைவா் சண்முகசுந்தரம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
Advertisement