முகப்பு
திருப்பூர்

போக்சோ சட்டத்தில் ஹோமியோபதி மருத்துவர் கைது

காங்கயம் அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக ஹோமியோபதி மருத்துவரை, போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

Updated On : 10 ஜனவரி 2021, 6:10 pm IST
பகிர்:

காங்கயம்: காங்கயம் அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக ஹோமியோபதி மருத்துவரை, போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

திருப்பூர், ஜே.பி. நகரைச் சேர்ந்தவர் ஜீவன்குமார் (50). இவர் ஊத்துக்குளி பகுதியில் ஹோமியோபதி மருத்துவமனை மற்றும் மருந்துக் கடை வைத்து நடத்தி வருகிறார். அங்கு பணிக்கு வந்த 14 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி, பாலியல் ரீதியாக துன்புறுத்தி, பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில், காங்கயம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து, விசாரணைக்குப் பின்னர் ஜீவன்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments