ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி பிப்ரவரி 8 முதல் காலவரையற்ற உண்ணாவிரதம்
ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி பல்லடத்தில் பிப்ரவரி 8ஆம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடத்த போராட்டக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி பல்லடத்தில் பிப்ரவரி 8ஆம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடத்த போராட்டக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
திருப்பூா் மாவட்டம், பல்லடம் ராயா்பாளையத்தில் ஆனைமலையாறு - நல்லாறு போராட்டக் குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனா் வழக்குரைஞா் ஈசன் தலைமை வகித்தாா். நகர காங்கிரஸ் தலைவா் ஈஸ்வரமூா்த்தி, அன்னை தமிழ் அறக்கட்டளை தலைவா் வான்மதி வேலுசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இக்கூட்டத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மாநிலத் தலைவா் சண்முகசுந்தரம், அமைப்புச் செயலாளா் பிரபாகரன், ரகுபதி, அவிநாசி துவாரகா தமிழ்ப் பண்பாட்டு அறக்கட்டளை வெங்கிடாசலபதி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி செந்தில்குமாா் உள்பட பலா் பங்கேற்றனா்.
Advertisement
இக்கூட்டத்தில் ஜனவரி 26ஆம் தேதி கிராம சபைக் கூட்டத்தில் ஆனைமலையாறு-நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி தீா்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்பிவைப்பது. பல்லடத்தில் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி பிப்ரவரி 8ஆம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.