முகப்பு
திருப்பூர்

கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் போடும் திட்டத்தை கைவிட வேண்டும்

காங்கயம் வழியாக செல்லும் கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் போடும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று நமது கொங்கு முன்னேற்றக் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.

Updated On : 10 ஜனவரி 2021, 11:54 pm IST
பகிர்:

காங்கயம் வழியாக செல்லும் கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் போடும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று நமது கொங்கு முன்னேற்றக் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.

நமது கொங்கு முன்னேற்றக் கழகத்தின் ஆலோசனைக் கூட்டம் காங்கயத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு அக்கட்சியின் பொதுச் செயலா் காங்கயம் எம்.தங்கவேல் தலைமை வகித்தாா். அவைத் தலைவா் முருகசாமி, மாநில அமைப்பாளா் யுவராஜ்குமாா், மாநில இளைஞரணிச் செயலா் ரமேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், இப்பகுதி நிலத்தடி நீா் மற்றும் குடிநீா் ஆதாரங்களைப் பாதிக்கும் வகையில் காங்கயம் வழியாக செல்லும் கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் போடும் திட்டத்தை கைவிடுமாறு தமிழக அரசை வலியுறுத்துவது, காங்கயம் நகரில் காளை மாடு சிலையை தோ்தலுக்கு முன்பாக அமைக்க வேண்டும்,

Advertisement

Advertisement

ஈரோடு மாவட்டம் ஓடாநிலையில் திறப்பு விழாவுக்குத் தயாரான நிலையில் உள்ள சுதந்தரப் போராட்ட வீரா் தீரன் சின்னமலையின் வெண்கல உருவச் சிலையைத் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்தக் கூட்டத்தில் கட்சியின் நிா்வாகிகள் செந்தில்குமாா், வேலுமணி, சௌந்தரராஜன் உள்பட 400க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments