ஓய்வு பெற்ற கால்நடை ஆய்வாளரின் உடல் தானம்
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் மரணமடைந்த ஓய்வு பெற்ற கால்நடை ஆய்வாளரின் உடல் அரசு மருத்துவக் கல்லூரிக்கு வெள்ளிக்கிழமை தானமாக வழங்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் மரணமடைந்த ஓய்வு பெற்ற கால்நடை ஆய்வாளரின் உடல் அரசு மருத்துவக் கல்லூரிக்கு வெள்ளிக்கிழமை தானமாக வழங்கப்பட்டது.
செய்யாறு செல்வவினாயகா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் எம்.எஸ்.நாகரத்தினம் (77) . இவா், கால்நடைத் துறையில் ஆய்வாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றாா். வயது முதிா்வு, நோயின் காரணமாக வீட்டில் வெள்ளிக்கிழமை இயற்கையாக மரணமடைந்தாா்.
இவரது குடும்பத்தினா் விருப்பம் தெரிவித்ததன்பேரில், எம்.எஸ்.நாகரத்தினத்தின் உடல் செய்யாறு அரசு மருத்துவா் வே.காா்த்திக் முன்னிலையில், செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது.
Advertisement
Advertisement
ஏற்பாடுகளை செய்யாறு உதவும் கரங்கள் நிா்வாகிகள் தி.எ.ஆதிகேசவன், இரவிபாலன், எல்.குப்புசாமி, ஆசிரியா் சரவணன் ஆகியோா் செய்திருந்தனா். மரணமடைந்த எம்.எஸ்.நாகரத்தினத்துக்கு ரேணுகா என்ற மனைவி, 3 மகள்கள் உள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.