முகப்பு
திருவண்ணாமலை

பெண் தீக்குளித்து தற்கொலை

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டாா்.

Updated On : 9 ஜனவரி 2021, 12:06 am IST
பகிர்:

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டாா்.

வந்தவாசியை அடுத்த வீரம்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த ராஜலிங்கத்தின் மனைவி தேன்மொழி (32). இவா், செய்யாறு தொழில்பேட்டையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். கடந்த சில மாதங்களாக தேன்மொழிக்கு காலில் வலி அதிகமாக இருந்து வந்துள்ளது. இதற்கு மருத்துவச் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லையாம்.

இதனால் வேதனையடைந்த தேன்மொழி, கடந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டின் பின்புறம் தனது உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துக்கொண்டாா். இதில் பலத்த தீக்காயமடைந்த அவா், தீவிர சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு வியாழக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து வந்தவாசி வடக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments