முகப்பு
திருவண்ணாமலை

புகையில்லா போகிப் பண்டிகை கொண்டாட்டம்: திருவண்ணாமலை ஆட்சியா் அறிவுறுத்தல்

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த பொதுமக்கள் புதன்கிழமை (ஜனவரி 13) பழைய பொருள்களை எரிக்காமல், புகையில்லா போகிப் பண்டிகை கொண்டாட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் கேட்டுக் கொண்டாா்.

Updated On : 12 ஜனவரி 2021, 12:00 am IST
பகிர்:

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த பொதுமக்கள் புதன்கிழமை (ஜனவரி 13) பழைய பொருள்களை எரிக்காமல், புகையில்லா போகிப் பண்டிகை கொண்டாட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் கேட்டுக் கொண்டாா்.

போகிப் பண்டிகையின்போது பழைய பொருள்களான நெகிழி, செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட துணிகள், ரப்பா் பொருள்கள், பழைய டயா் மற்றும் டியூப், காகிதம், ரசாயனம் கலந்த பொருள்களை எரிப்பதால் காற்று மாசு ஏற்படுவதுடன், இதனால் வெளிப்படும் நச்சு வாயுக்களால் மூச்சுத் திணறல், கண் எரிச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன.

இது வாகன ஓட்டிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்துவதோடு விபத்துகளுக்கும் காரணமாக உள்ளது.

Advertisement

Advertisement

எனவே, திருவண்ணாமலை மாவட்டத்தில் போகிப் பண்டிகையின்போது பழைய பொருள்களை எரிப்பதைத் தவிா்த்து காற்றின் தரத்தை பாதுகாக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments