வணிகம்

ஜூலை 27-ல் 'நத்திங்' நிறுவனத்தின் முதல் தயாரிப்பான வயர்லஸ் இயர்பட்ஸ்

DIN

லண்டனைச் சேர்ந்த நத்திங் நிறுவனம் தனது முதல் தயாரிப்பான வயர்லஸ் இயர்பட்ஸை ஜூலை 27-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்கிறது.

ஒன்-பிளஸ் நிறுவனத்தின் துணை நிறுவனரும், தொழில்முனைவோருமான கார்ல் பெய், நத்திங் நிறுவனத்தை உருவாக்கியுள்ளார். அதன் மூலம் திறன் வாய்ந்த மின்னணு தயாரிப்புகளில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில், நத்திங் நிறுவனத்தின் முதல் தயாரிப்பான இயர்பட்ஸ் 
ஜூலை 27-ம் தேதி இந்தியா உள்பட உலகம் முழுவதும் அறிமுகமாகிறது.

இது குறித்து அந்நிறுவனத்தின் துணைத் தலைவரும் பொது மேலாளருமான  மனு ஷர்மா கூறியதாவது, ’’நத்திங் இயர் எனும் வயர்லஸ் இயர்பட்ஸை உலக சந்தையில் அறிமுகம் செய்வதில் கவனம் செலுத்தி வருகிறோம். முதல் தயாரிப்பு என்பதால் இது எங்களுக்கு மிகவும் முக்கியமானது.

இயர்போன் சந்தை மாற்றத்திற்காக ஏங்குகிறது. அந்த வெற்றிடத்தை நிரப்பும் வகையில் முதல் நாள் முதலே அதிக கவனம் செலுத்தி பணியாற்றி வருகிறோம்.

தற்போது எங்களது முதல் தயாரிப்பை அறிமுகம் செய்வதில் பெருமிதம் அடைகிறோம். ஜூலை 27-ம் தேதி இந்தியா உள்பட உலகம் முழுவதும் நத்திங் இயர்பட்ஸ் அறிமுகமாகும்.

சந்தைப்படுத்தும் முறையில், இந்திய இணைய வழி சந்தைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள ஃபிளிப்கார்ட் நிறுவனத்துடன் இணைந்துள்ளோம்.

எங்கள் தயாரிப்பின் அனைத்து பொருள்களும் ஐரோப்பிய நாடுகளில் வடிவமைக்கப்படுகின்றன. வடிவமைப்பில் புதிய மொழியை அவர்கள் உருவாக்கியுள்ளது நத்திங் இயர்பட்ஸிலும் பிரதிபலித்துள்ளது. 

ஜூன் மாதமே இந்த இயர்பட்ஸ் வெளியிட திட்டமிடப்பட்டிருந்த நிலையில், ஒலி அமைப்பில் நுணுக்கங்களை மேம்படுத்தும் பணிகள் நிறைவடையாததால் ஒத்திவைக்கப்பட்டது. தற்போது ஜூலை 27-ம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளோம். நுகர்வோர் தொழில்நுட்ப சந்தையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்'' என்று கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தஞ்சை பெரிய கோயில் பராமரிப்பு: தமிழக அரசு விளக்கம்

75 வயது முதியவா் மீண்டும் பிரதமராக வேண்டுமா? லாலு மகள் மிசா பாரதி பிரசாரம்

சந்தேஷ்காளி வழக்கு: சிபிஐ விசாரணை திருப்தி அளிக்கிறது - கொல்கத்தா உயா்நீதிமன்றம்

தென்மாவட்டங்களில் கல்குவாரிகளை மூட வேண்டும் -டாக்டா் க.கிருஷ்ணசாமி

திட்டப் பயனாளிகள் குறித்த கணக்கெடுப்பு: அரசியல் கட்சிகளுக்கு தோ்தல் ஆணையம் எச்சரிக்கை

SCROLL FOR NEXT