வணிகம்

இன்றுமுதல் ஐ-போன் 15: இந்தியாவில் உற்பத்தியாவதால் விலை குறைவா?

ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-போன் 15 மாடல் இன்று (செப். 12) வெளியாகிறது. இந்தியா உள்பட சர்வதேச சந்தைகளில் இன்றுமுதலே ஐ-போன் 15 வகை மாடல்கள் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

DIN


ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-போன் 15 மாடல் இன்று (செப். 12) வெளியாகிறது. இந்தியா உள்பட சர்வதேச சந்தைகளில் இன்றுமுதலே ஐ-போன் 15 வகை மாடல்கள் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

ஆப்பிள் நிறுவனத்தின் இந்த ஐ-போன் 15 முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்படுவதால், 'மேட் இன் இந்தியா' என்று அச்சிடப்பட்டு வெளியாகிறது. 

ஆப்பிள் நிறுவனத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 15 சீரீஸில் ஐ-போன் 15, ஐ-போன் 15 ப்ரோ, ஐ-போன் 15 ப்ரோ மேக்ஸ், மற்றும் ஐ-போன் 15 பிளஸ் ஆகிய மாடல்கள் வெளியாகின்றன. 

இதில் முக்கிய திருத்தமாக ஆப்பிள் நிறுவனங்களின் சார்ஜிங் போர்ட்டர்களுக்கு பதிலாக, டைப்-சி சார்ஜிங் போர்ட்டர் அம்சத்துடன் ஐ-போன் 15 வருகிறது. 

ஐரோப்பிய நாடுகளில் அனைத்து மின்னணு சாதனங்களுக்கும் ஒரே மாதிரியான சார்ஜிங் அம்சத்தை பயன்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், ஆப்பிள் நிறுவனம் சார்ஜிங் போர்டரில் மாற்றங்களைச் செய்துள்ளது. 

இந்தியாவில் ஐ-போன் 15 விலை குறைவா?

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுவதால் ஐ-போன் 15 விலை கணிசமாக குறைந்திருக்கும் என சமூக வலைதளங்களில் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். 

உண்மை என்னவெனில், இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுவதால், இறக்குமதி வரி மிச்சமாகிறது. ஷிப்பிங் சார்ஜ் எனப்படும் பொருளை பயனர்களிடம் கொண்டு சேர்ப்பதற்கான தொகை குறையும். இதனால், அதிகம்பேர் விலை குறைவு எனக் கருதுகின்றனர்.

இந்தியாவில் ஐ-போன் 15 அடிப்படை அம்சங்கள் கொண்ட மாடல் விலை, ரூ. 1.2 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மற்ற ஐ-போன்களை விட விலை குறைவாக உள்ளதால், சாம்சங், ஒன் பிளஸ் நிறுவனங்களுக்குப் போட்டியாக ஐ-போன் 15 விற்பனை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழ்நாட்டில் 5.90 கோடி எஸ்ஐஆர் படிவங்கள் விநியோகம்: தேர்தல் ஆணையம்

பழங்குடியினரை அங்கீகரிக்கத் தவறிய காங்கிரஸ்: பிரதமர் மோடி குற்றச்சாட்டு

பாகிஸ்தானில் காவல் துறையுடன் துப்பாக்கிச் சண்டை: பயங்கரவாதக் குழுவினர் 5 பேர் பலி!

“பிகார் வெற்றிக்கான காரணம் இதுதான்! வெற்றி பெற்றவர்களைப் பாராட்ட வேண்டும்!” வைகோ பேட்டி

இந்தியாவுக்கு 30,000 விமானிகள் தேவை: மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு தகவல்!

SCROLL FOR NEXT