கோப்புப் படம் 
வணிகம்

கரடியின் ஆதிக்கத்தில் பங்குச் சந்தை; சென்செக்ஸ் 1,064 புள்ளிகள் சரிவு!

சென்செக்ஸ் 1,064.12 புள்ளிகள் சரிந்து 80,684.45 புள்ளிகளாகவும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 332.25 புள்ளிகள் சரிந்து 24,336.00 புள்ளிகளாக நிலைபெற்றது.

DIN

மும்பை: அமெரிக்க பெடரல் வங்கியின் வட்டி விகித முடிவுகள் குறித்தும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ஹெச்டிஎஃப்சி வங்கி ஆகிய ப்ளூ சிப் நிறுவனங்களின் பங்குகளில் முதலீட்டாளர்கள் இன்று எச்சரிக்கையான அணுகுமுறையை பின்பற்றியதால், இன்றைய வர்த்தகத்தில் பெஞ்ச்மார்க் குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி வெகுவாக சரிந்து முடிந்தது.

இன்றைய காலை நேர வர்த்தகத்தில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 350.98 புள்ளிகள் சரிந்து 81,397.59 புள்ளிகளாகவும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 100.8 புள்ளிகள் குறைந்து 24,567.45 புள்ளிகளாக இருந்தது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், பார்தி ஏர்டெல், நெஸ்லே, லார்சன் & டூப்ரோ, பஜாஜ் ஃபின்சர்வ், ஹெச்டிஎஃப்சி வங்கி, ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், டைட்டன் உள்ளிட்ட பங்குகள் சரிந்தும், டாடா மோட்டார்ஸ், அதானி போர்ட்ஸ், டெக் மஹிந்திரா, ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், ஹிந்துஸ்தான் யூனிலீவர் ஆகிய பங்குகள் உயர்ந்தும் வர்த்தகமானது.

இதையும் படிக்க: மாருதி சுஸுகி விற்பனை 10% உயா்வு

ஆட்டோமொபைல், பைனான்சியல், மெட்டல், எண்ணெய் & எரிவாயு உள்ளிட்ட துறைகளின் தொடர்ந்து இரண்டாவது நாளாக சரிவைச் சந்தித்தன. அதே வேளையில், இன்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 1,064.12 புள்ளிகள் சரிந்து 80,684.45 புள்ளிகளாகவும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 332.25 புள்ளிகள் சரிந்து 24,336.00 புள்ளிகளாக நிலைபெற்றது.

ஸ்ரீராம் பைனான்ஸ், பார்தி ஏர்டெல், கிராசிம் இண்டஸ்ட்ரீஸ், ஹீரோ மோட்டோகார்ப் மற்றும் ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல் ஆகியவை நிஃப்டியில் அதிகமாக சரிந்த நிலையில், ஐடிசி மற்றும் சிப்லா ஆகிய பங்குகள் உயர்ந்து முடிந்தது.

அனைத்து துறை குறியீடுகளும் இன்று சரிந்த நிலையில் ஆட்டோ, வங்கி, எரிசக்தி, உலோகம், எண்ணெய் மற்றும் எரிவாயு தலா 1 சதவிகிதம் சரிந்தது.

ஓபராய் ரியால்டி, மேக்ஸ் ஹெல்த்கேர், கெய்ன்ஸ் டெக்னாலஜிஸ், கோஃபோர்ஜ், இந்தியன் ஹோட்டல்ஸ், 360 ஒன் வாம், பேடிஎம், பெர்சிஸ்டன்ட் சிஸ்டம்ஸ், கேப்லின் லேப்ஸ், டிக்சன் டெக்னாலஜிஸ், லாயிட்ஸ் மெட்டல்ஸ், பேஜ் இண்டஸ்ட்ரீஸ், இன்ஃபோ எட்ஜ், கோரமண்டல் இன்டர்நேஷனல் உள்ளிட்ட 270 பங்குகள் மும்பை பங்குச் சந்தையில் இன்று 52 வார உச்சத்தைத் தொட்டது.

இதையும் படிக்க: மொத்த விலை பணவீக்கம் 3 மாதங்கள் காணாத சரிவு

ஆசிய சந்தைகளில் சியோல், ஷாங்காய் மற்றும் ஹாங்காங் ஆகியவை சரிந்தும் டோக்கியோ சற்று உயர்ந்து முடிந்தது. வால் ஸ்ட்ரீட் நேற்று (திங்கள்கிழமை) பெரும்பாலும் உயர்ந்து முடிந்தது.

உலகளவில், பங்குச் சந்தைகள் ஃபெடரல் ஓபன் மார்க்கெட் கமிட்டியின் முடிவை எதிர்நோக்கி உள்ள நிலையில், முதலீட்டாளர்கள் ஃபெட் நகர்வுகளில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் நேற்று (திங்கள்கிழமை) ரூ.278.70 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்றுள்ளனர்.

உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் 0.14 சதவிகிதம் குறைந்து பீப்பாய்க்கு 73.81 டாலராக உள்ளது.

நேற்று, மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 384.55 புள்ளிகள் சரிந்து 81,748.57 புள்ளிகளிலும், நிஃப்டி 100.05 புள்ளிகள் சரிந்து 24,668.25 ஆக நிலைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சட்டவிரோத குடியேற்றம்: தில்லியில் 5 வங்கதேசத்தினர் கைது!

கையில் பணமில்லை.. நடைபாதையில் படுத்துறங்கிய மென்பொருள் நிறுவன ஊழியர்!

திமுக ஆட்சியில் நிறையும் இருக்கு, குறையும் இருக்கு!பவர்கட் பிரச்னைக்கு தீர்வில்லை!-பிரேமலதா விஜயகாந்த்

சத்ரபதி சிவாஜி குறித்த புதிய படம்.. தடை செய்ய ஹிந்துத்துவ அமைப்பு வலியுறுத்தல்! ஏன்?

கடைசி நாளில் இங்கிலாந்து அணி பயந்துவிட்டது: இங்கிலாந்து முன்னாள் கேப்டன்

SCROLL FOR NEXT