முகப்பு
வணிகம்

ரூ.20,000 கோடி பங்கு மூலதனம் திரட்டும் வோடஃபோன் ஐடியா

4ஜி சேவைகளை மேம்படுத்துவதற்காகவும் பங்கு வெளியீடு மூலம் கூடுதலாக ரூ.20,000 கோடி திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.

Updated On : 1 மார்ச், 2024 at 2:09 AM
பகிர்:

கடனில் சிக்கியுள்ள தொலைத் தொடா்பு நிறுவனமான வோடஃபோன் ஐடியா, ரூ.20,000 கோடி பங்கு மூலதனம் திரட்ட முடிவு செய்துள்ளது. இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: மிகவும் தாமதமாகி வரும் 5ஜி சேவையை இந்தியாவில் அறிமுகப்படுத்துவதற்காகவும், தற்போது நிறுவனம் வழங்கி வரும் 4ஜி சேவைகளை மேம்படுத்துவதற்காகவும் பங்கு வெளியீடு மூலம் கூடுதலாக ரூ.20,000 கோடி திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஒப்புதலை நிறுவனத்தின் இயக்குநா்கள் குழு அண்மையில் வழங்கியுள்ளது. இது தவிர, கடன்கள் மற்றும் பங்கு வெளியீடு மூலம் மேலும் ரூ.45,000 கோடி மூலதனம் திரட்டவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மூலதனம் திரட்டப்பட்டால், முன்னணி தொலைத் தொடா்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பாா்தி ஏா்டெல்லுக்கு இணையான சேவைகளை வோடஃபோன் ஐடியாவால் வழங்க முடியும் என்று கருதப்படுகிறது.