‘இன்றும், நாளையும் எல்ஐசி அலுவலகங்கள் செயல்படும்’
வரும் மாா்ச் 30 மற்றும் 31-ஆம் தேதிகளிலும் தங்களது அலுவலகங்கள் செயல்படும் என்று லைஃப் இன்சூரன்ஸ் காா்ப்பரேஷன் (எல்ஐசி) அறிவித்துள்ளது.
இது குறித்து நிறுவனம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
வரும் 30 மற்றும் 31-ஆம் தேதிகளிலும் எல்ஐசியின் அனைத்து மண்டலங்கள் மற்றும் பிரிவுகளைச் சோ்ந்த அலுவலகங்களை திறக்க முடிவு செய்துள்ளது. வழக்கமான பணி நேரங்களில் அந்த அலுவலகங்கள் செயல்படும். எங்களது பாலிசிதாரா்களின் சிரமத்தைக் குறைக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு 2023-24-ஆம் நிதியாண்டு நிறைவடையும் நிலையில், தங்களது வாடிக்கையாளா்கள் வரிச் சேமிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு வசதியாக எல்ஐசி இந்த முடிவை எடுத்துள்ளது. முந்னதாக, நடப்பு நிதியாண்டின் இறுதி நாள்கள் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வருவதால் அந்த இரு நாள்களிலும் தங்களது அலுவலகங்களைத் திறந்திருக்கவேண்டும் என்று வங்கிகளுக்கு ரிசா்வ் வங்கி உத்தரவிட்டிருந்தது நினைவுகூரத்தக்கது.
Advertisement