அதானி குழுமம். (கோப்புப் படம்) 
வணிகம்

ஹிண்டன்பர்க் அறிக்கைக்கு முந்தைய நிலைக்கு மீண்டும் உயர்ந்த அதானி பங்குகள்!

ஹிண்டன்பர்க் அறிக்கை முந்தைய நிலைக்கு மீண்டும் உயர்ந்த அதானி பங்குகள்!

DIN

புதுதில்லி: அதானி எண்டர்பிரைசஸ் பங்குகள், ஹிண்டன்பர்க் அறிக்கை முந்தைய நிலைக்கு மீண்டும் உயர்ந்தது. இது இன்றைய இன்ட்ரா-டே வர்த்தகத்தில் ஒரு வருட உச்சத்தை எட்டியது குறிப்பிடத்தக்கது.

ஹிண்டன்பர்க் கடந்த ஆண்டு ஜனவரி 24ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையால் அதானி குழுமம் கடுமையான இழப்புகளை சந்தித்தது. இது பங்குச் சந்தை வீழ்ச்சிக்கும் வழிவகுத்தது. கவுதம் அதானி தலைமையிலான இந்த நிறுவனம் சந்தை மதிப்பில் சுமார் 150 பில்லியன் அமெரிக்க டாலர் இழப்பை சந்தித்தது. இதனையடுத்து அதானி குழுமம் அனைத்து விதமான குற்றச்சாட்டுகளையும் கடுமையாக மறுத்தது.

இந்த நிலையில், அதானி எண்டர்பிரைசஸ் பங்குகள் இன்றைய வர்த்தகத்தில், மும்பை பங்குச் சந்தையில் 1.91 சதவிகிதம் உயர்ந்து 52 வார உச்ச விலையான ரூ.3,456.25 எட்டியது. எனினும் பங்குச் சந்தை முடிவில் பங்கின் விலையானது ரூ.3,384.65 ஆக முடிவடைந்தது. இதன் மூலம் அதானி குழும நிறுவனங்கள் தொடர்ந்து வெளிச்சத்தில் இருந்தது.

அதானி எண்டர்பிரைசஸ் பங்குகள் தொடர்ச்சியாக ஐந்தாவது நாளாக உயர்ந்து, 11.51 சதவிகிதமாக இருந்தது. அதே வேளையில், பங்கின் விலை கடந்த ஆண்டு ஜனவரி 23ம் தேதியன்று ரூ.3,434.50 இருந்தது. அந்த நிலையிலிருந்து, இந்த பங்கின் விலை கடந்த ஆண்டு பிப்ரவரி 27ம் தேதியன்று ரூ.1,194.20 ஆக சரிந்தது. இது கடந்த ஆண்டு பிப்ரவரி 27-ம் தேதி நிலையிலிருந்து தற்போது 189 சதவிகிதம் ஏற்றம் கண்டது. இதன் மூலம் பட்டியலிடப்பட்ட 10 நிறுவனங்களின் ஒருங்கிணைந்த சந்தை மதிப்பானது வியாழக்கிழமை அன்று ரூ.17.23 லட்சம் கோடியாக இருந்தது.

தமிழ்நாடு மின் நிறுவனத்திற்கு நிலக்கரி வழங்குவதில் எந்த தவறும் இல்லை என்று முதலீட்டாளர்கள் கருதியதால், அதானி குழுமத்தின் பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் ரூ.11,300 கோடி ஈட்டிய பிறகும், புதன்கிழமையன்று சந்தை மூலதனம் மீண்டும் 200 பில்லியன் டாலர் (ரூ.16.9 லட்சம் கோடி) உயர்ந்தது.

அகமதாபாத்தை தலைமையிடமாகக் கொண்ட அதானி போர்ட்ஃபோலியோ, இந்தியாவில் தளவாடங்கள் (துறைமுகங்கள், விமான நிலையங்கள், தளவாடங்கள், கப்பல் மற்றும் ரயில், வளங்கள், மின் உற்பத்தி) ஆகியவற்றில் ஆர்வமுள்ள பன்முகப்படுத்தப்பட்ட வணிகங்களின் மிகப்பெரிய மற்றும் வேகமாக வளர்ந்து வரும் நிறுவனமாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பழனி அருகே காா் கவிழ்ந்து பெண் உயிரிழப்பு

ஆா்.எஸ். மங்கலம் பட்டியலின மக்களுக்கு வழங்கிய நிலத்தை அபகரிப்பதைக் கண்டித்து மறியல்

ஏற்றுமதியாளா்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை

தமிழ் வளா்ச்சித் துறை போட்டிகளில் வென்ற மாணவா்களுக்கு பரிசளிப்பு

கானாடுகாத்தான் பகுதியில் நவ.7-இல் மின் தடை

SCROLL FOR NEXT