முகப்பு
வணிகம்

லேவில் முதல் பசுமை ஹைட்ரஜன் எரிபொருள் நிலையத்தை அமைத்த அமர ராஜா இன்ஃப்ரா!

என்டிபிசி லிமிடெட் நிறுவனத்திற்காக லடாக்கின் லே-வில் முதல் பசுமை ஹைட்ரஜன் எரிபொருள் நிலையத்தின் கட்டுமானத்தை முடித்துள்ளதாக அமர ராஜா இன்ஃப்ரா இன்று தெரிவித்துள்ளது.

Updated On : 25 நவம்பர், 2024 at 5:37 PM
அமர ராஜா இன்ஃப்ரா
பகிர்:

மும்பை: என்டிபிசி லிமிடெட் நிறுவனத்திற்காக லடாக்கின் லே-வில் முதல் பசுமை ஹைட்ரஜன் எரிபொருள் நிலையத்தின் கட்டுமானத்தை முடித்துள்ளதாக அமர ராஜா இன்ஃப்ரா தெரிவித்துள்ளது.

மத்திய மின்சாரம் மற்றும் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சர் மனோகர் லால் கட்டார் நேற்று இந்த வசதியை நாட்டுக்கு அர்ப்பணித்தார் என்று நிறுவனம் தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

கடல் மட்டத்திலிருந்து 3,400 மீட்டர் உயரத்தில் மைனஸ் 30 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை மாறுபடும் நிலையில், நாள் ஒன்றுக்கு 80 கிலோ ஜிஹெச்-2 உற்பத்தி செய்யும் திறன் கொண்ட எரிபொருள் நிலைய திட்டத்தை கடந்த 2 ஆண்டுகளில் நிறைவடைந்தாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

Advertisement

இந்த திட்டத்தால் லே மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உமிழ்வு இல்லாத போக்குவரத்து செயல்படுத்தப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க: அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்: பாலச்சந்திரன்

இந்த சவாலான திட்டத்தை நிறைவு செய்வது எங்கள் பொறியியல், கொள்முதல் மற்றும் கட்டுமானம் நிபுணத்துவத்தை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் பசுமை ஹைட்ரஜன் உள்கட்டமைப்பு இடத்தில் நுழைந்த முதல் நிறுவனம் என்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம் என்றார் அமர ராஜா இன்ஃப்ரா பிரைவேட் லிமிடெட் வணிகத் தலைவர் துவாரகநாத ரெட்டி.

வரும் நாட்களில், நாடு முழுவதும் பல ஹைட்ரஜன் எரிபொருள் நிலையங்களை ஆய்வு செய்து வரிசைப்படுத்துவதற்கும் இது பயனுள்ளதாக இருக்கும் என்றது அமர ராஜா இன்ஃப்ரா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.