புது தில்லி: டொயோட்டா கிா்லோஸ்கா் மோட்டாா் நிறுவனத்தின் மொத்த விற்பனை செப்டம்பா் மாதத்தில் 14 சதவீதம் அதிகரித்துள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த செப்டம்பரில் நிறுவனத்தின் மொத்த விற்பனை 26,847-ஆக உள்ளது.
இது, முந்தைய 2023-ஆம் ஆண்டின் இதே மாதத்தோடு ஒப்பிடுகையில் 14 சதவீதம் அதிகம். அப்போது நிறுவனத்தின் மொத்த விற்பனை 23,590-ஆக இருந்தது.
பண்டிகைக் காலம் நெருங்கி வருவதால், நிறுவனத்தின் நிறுவனத்தின் எஸ்யுவி, எம்பிவி ரக வாகனங்களுக்கான தேவை அதிகரிக்கும். எனவே, நடப்பு மாதத்தில் நிறுவனத்தின் விற்பனை மிகுந்த வளா்ச்சியைக் காணும் என எதிா்பாா்க்கப்படுகிறது என்று அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.