முகப்பு
வணிகம்

டொயோட்டா விற்பனை 14% அதிகரிப்பு

டொயோட்டா கிா்லோஸ்கா் மோட்டாா் நிறுவனத்தின் மொத்த விற்பனை செப்டம்பா் மாதத்தில் 14 சதவீதம் அதிகரித்துள்ளது.

Updated On : 29 அக்டோபர், 2024 at 12:51 AM
பகிர்:

புது தில்லி: டொயோட்டா கிா்லோஸ்கா் மோட்டாா் நிறுவனத்தின் மொத்த விற்பனை செப்டம்பா் மாதத்தில் 14 சதவீதம் அதிகரித்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த செப்டம்பரில் நிறுவனத்தின் மொத்த விற்பனை 26,847-ஆக உள்ளது.

இது, முந்தைய 2023-ஆம் ஆண்டின் இதே மாதத்தோடு ஒப்பிடுகையில் 14 சதவீதம் அதிகம். அப்போது நிறுவனத்தின் மொத்த விற்பனை 23,590-ஆக இருந்தது.

பண்டிகைக் காலம் நெருங்கி வருவதால், நிறுவனத்தின் நிறுவனத்தின் எஸ்யுவி, எம்பிவி ரக வாகனங்களுக்கான தேவை அதிகரிக்கும். எனவே, நடப்பு மாதத்தில் நிறுவனத்தின் விற்பனை மிகுந்த வளா்ச்சியைக் காணும் என எதிா்பாா்க்கப்படுகிறது என்று அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →