முகப்பு
வணிகம்

பஞ்சாப் நேஷனல் வங்கியின் முதல் காலாண்டு லாபம் 48% சரிவு!

ஜூன் 30, 2025 உடன் முடிவடைந்த காலாண்டில், வரிச் செலவுகள் அதிகரித்ததன் காரணமாக, பஞ்சாப் நேஷனல் வங்கி நிகர லாபம் 48 சதவிகிதம் சரிந்து ரூ.1,675 கோடியாக இருப்பதாக தெரிவித்தது.

Updated On : 30 ஜூலை 2025, 8:24 pm IST
பஞ்சாப் நேஷனல் வங்கி
பகிர்:

புதுதில்லி: ஜூன் 30, 2025 உடன் முடிவடைந்த காலாண்டில், வரிச் செலவுகள் அதிகரித்ததன் காரணமாக, பஞ்சாப் நேஷனல் வங்கி நிகர லாபம் 48 சதவிகிதம் சரிந்து ரூ.1,675 கோடியாக இருப்பதாக தெரிவித்தது.

அரசுக்குச் சொந்தமான வங்கியின் நிகர லாபம் முந்தைய ஆண்டு இதே காலத்தில் ரூ.3,252 கோடியாக இருந்தது.

மதிப்பாய்வு செய்யப்பட்ட காலாண்டில் மொத்த வருமானம் ரூ.32,166 கோடியிலிருந்து ரூ.37,232 கோடியாக உயர்ந்துள்ளது. அதே வேளையில் வட்டி வருமானமும் ரூ.31,964 கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலாண்டில் இது ரூ.28,556 கோடியாக இருந்தது.

Advertisement

Advertisement

வங்கியின் செயல்பாடு லாபம் ரூ.7,081 கோடியாக உயர்ந்துள்ளது. இதுவே ஒரு வருடத்திற்கு முன்பு இதே காலாண்டில் ரூ.6,581 கோடியாக இருந்தது.

இருப்பினும், இந்தக் காலாண்டில் வரிச் செலவுகள் இரு மடங்கிற்கும் மேலாக அதிகரித்து ரூ.5,083 கோடியாக உள்ளது. கடந்த வருடம் இதே காலத்தில் இது ரூ.2,017 கோடியாக இருந்தது.

ஒதுக்கீடுகள் மற்றும் எதிர்பாராத செலவுகள் முதல் காலாண்டில் ரூ.323 கோடியாக குறைந்துள்ளது. இதுவே ஒரு வருடத்திற்கு முன்பு இதே காலத்தில் ரூ.1,312 கோடியாக இருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments