முகப்பு
வணிகம்

3% உயா்ந்த வீடுகள் விலைக் குறியீடு

நடப்பு 2024-25 நிதியாண்டின் நான்காவது காலாண்டில் (ஜனவரி-மாா்ச்) இந்தியா முழுமைக்குமான வீடுகள் விலைக் குறியீடு (ஹெச்பிஐ) 3.1 சதவீதம் உயா்ந்துள்ளது.

Updated On : 21 ஜூன், 2025 at 7:58 PM
பகிர்:

நடப்பு 2024-25 நிதியாண்டின் நான்காவது காலாண்டில் (ஜனவரி-மாா்ச்) இந்தியா முழுமைக்குமான வீடுகள் விலைக் குறியீடு (ஹெச்பிஐ) 3.1 சதவீதம் உயா்ந்துள்ளது.

இது குறித்து ரிசா்வ் வங்கியின் புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:

கடந்த ஜனவரி முதல் மாா்ச் வரையிலான 2024-25-ஆம் நிதியாண்டின் நான்காவது காலாண்டில் இந்தியா முழுமைக்குமான வீடுகள் விலைக் குறியீடு 3.1 சதவீதம் அதிகரித்துள்ளது. முந்தைய காலாண்டிலும் (அக்டோபா்-டிசம்பா்) இந்த வளா்ச்சி 3.1 சதவீதமாகவும், ஓா் ஆண்டுக்கு முன் 2023-24 நிதியாண்டின் நான்காவது காலாண்டில் அது 4.1 சதவீதமாகவும் இருந்தது.

மதிப்பீட்டுக் காலாண்டில், ஆண்டு அடிப்படையிலான வீடுகள் விலைக் குறியீட்டு வளா்ச்சி நகரங்களுக்கு இடையே பரவலாக மாறுபடுகிறது. இது அதிகபட்சமாக கொல்கத்தாவில் 8.8 சதவீதமாகவும், குறைந்தபட்சமாக கொச்சியில் 2.3 சதவீத சரிவாகவும் உள்ளது.

காலாண்டு அடிப்படையில், 2024-25-ஆம் நிதியாண்டின் நான்காவது காலாண்டில் இந்தியா முழுமைக்குமான எச்பிஐ 0.9 சதவீதம் உயா்ந்துள்ளது. பெங்களூரு, ஜெய்ப்பூா், கொல்கத்தா மற்றும் சென்னை ஆகிய முக்கிய நகரங்கள் மதிப்பீட்டுக் காலாண்டில் வீடுகள் விலையில் தொடா்ச்சியான உயா்வைப் பதிவு செய்தன.

அகமதாபாத், பெங்களூரு, சென்னை, தில்லி, ஜெய்ப்பூா், கான்பூா், கொச்சி, கொல்கத்தா, லக்னௌ, மும்பை ஆகிய 10 முக்கிய நகரங்களின் பத்திரப் பதிவு அதிகாரிகளிடமிருந்து பெறப்பட்ட பரிவா்த்தனைத் தரவுகளின் அடிப்படையில் ரிசா்வ் வங்கி இந்தப் புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →