பங்குச் சந்தை ஏற்றத்துடன் தொடக்கம்!
இந்திய பங்குச் சந்தை நிலவரம் பற்றி...
இந்திய பங்குச் சந்தை வாரத்தின் கடைசி நாளான இன்று(வெள்ளிக்கிழமை) காலை ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றது.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 9.30 மணி நிலவரப்படி, 411 புள்ளிகள் உயர்ந்து 81,363 ஆக விற்பனையாகி வருகின்றது.
அதேபோல், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 153 புள்ளிகள் உயர்ந்து 24,763 ஆக வர்த்தகமாகி வருகின்றது.
Advertisement
Advertisement
நிஃப்டியைப் பொறுத்தவரை வங்கிகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறைகள் ஏற்றத்துடன் காணப்படுகிறது.
சென்செக்ஸில் ஐடிசி, இன்ஃபோசிஸ், அதானி போர்ட்ஸ், பஜாஜ், டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல்ஸ், டிசிஎஸ் உள்ளிட்ட பங்குகள் லாபத்துடனும், சன் பார்மா உள்ளிட்ட பங்குகள் சரிவுடனும் வர்த்தகமாகி வருகின்றது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.