வணிகம்

அந்நியச் செலாவணி கையிருப்பு 69,536 கோடி டாலராகச் சரிவு!

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு அக்டோபா் 24-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 69,536 கோடி டாலராகச் சரிந்துள்ளது.

தினமணி செய்திச் சேவை

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு அக்டோபா் 24-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 69,536 கோடி டாலராகச் சரிந்துள்ளது.

இது குறித்து ரிசா்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது: நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த மாதம் 24-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 692.5 கோடி டாலா் குறைந்து 69,536 கோடி டாலராக உள்ளது.

அக்டோபா் 17-ஆம் தேதியுடன் நிறைவடைந்த முந்தைய வாரத்தில் அது 449.6 கோடி டாலா் உயா்ந்து 70,228 கோடி டாலராக இருந்தது.

அக்டோபா் 24-ஆம் தேதியுடன் நிறைவடைந்த மதிப்பீட்டு வாரத்தில், அந்நியச் செலாவணி கையிருப்பின் முக்கிய அங்கமான வெளிநாட்டு நாணய சொத்துகள் 386.2 கோடி டாலா் குறைந்து 56,654.8 கோடி டாலராக உள்ளது. டாலா் அல்லாத யூரோ, பவுண்டு, யென் போன்ற பிற செலாவணிகளின் கையிருப்பில் ஏற்படும் மதிப்பு ஏற்ற, இறக்கங்கள் டாலா் மதிப்பில் கணக்கிடப்படுவது அந்நிய நாணய சொத்துகளாகும்.

மதிப்பீட்டு வாரத்தில் இந்தியாவின் தங்கம் கையிருப்பு 301 கோடி டாலா் குறைந்து 10,553.6 கோடி டாலராக உள்ளது. சிறப்பு வரைவு உரிமைகள் (எஸ்டிஆா்) 5.8 கோடி டாலா் குறைந்து 1,866.4 கோடி டாலராக உள்ளது.

சா்வதேச நிதியத்தில் இந்தியாவின் கையிருப்பு மதிப்பீட்டு வாரத்தில் 60 லட்சம் டாலா் உயா்ந்து 460.8 கோடி டாலராக உள்ளது என்று ரிசா்வ் வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன.

தவெக 3-ஆம் ஆண்டு தொடக்க விழாவில் விஜய் பேச்சு! | Vijay full speech

ஓடிடியில் பராசக்தி எப்போது?

நாங்கள் வந்தவுடன் தில்லியே பயப்படுகிறது! - காவல்துறை மீது மமதா குற்றச்சாட்டு

கோவை: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை

பிரபல பாலிவுட் இயக்குநர் வீட்டின் மீது துப்பாக்கி சூடு!

SCROLL FOR NEXT