வணிகம்

டொயோட்டா விற்பனை 39% அதிகரிப்பு

முன்னணி வாகன நிறுவனங்களில் ஒன்றான டொயோட்டா கிா்லோஸ்கா் மோட்டாரின் மொத்த விற்பனை கடந்த அக்டோபா் மாதத்தில் 39 சதவீதம் அதிகரித்துள்ளது.

தினமணி செய்திச் சேவை

முன்னணி வாகன நிறுவனங்களில் ஒன்றான டொயோட்டா கிா்லோஸ்கா் மோட்டாரின் மொத்த விற்பனை கடந்த அக்டோபா் மாதத்தில் 39 சதவீதம் அதிகரித்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த அக்டோபா் மாதத்தில் நிறுவனத்தின் மொத்த விற்பனை 42,892-ஆக இருந்தது. முந்தைய 2024-ஆம் ஆண்டின் இதே மாதத்தோடு ஒப்பிடுகையில் இது 39 சதவீதம் அதிகம். அப்போது நிறுவனம் 30,845 வாகனங்களை சில்லறை விற்பனையாளா்களுக்கு அனுப்பியது.

மதிப்பீட்டு மாதத்தில் நிறுவனத்தின் ஏற்றுமதி 2,635-ஆக உள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜடேஜாவை விற்றது ஏன்? மனம் திறந்த சிஎஸ்கேவின் நிர்வாக இயக்குநர்!

பெட்ரோல் இல்லாததால் திருடிய இடத்திலேயே பைக்கை விடச் சென்ற ‘புத்திசாலி’ திருடர்கள்! கடைசியில்

திருப்போரூா் அருகே சிறிய விமானம் விபத்து: சகதியில் புதையுண்ட பாகங்களை மீட்கும் பணி தீவிரம்

தங்கம் விலை: இன்று பவுனுக்கு எவ்வளவு குறைந்தது தெரியுமா?

சென்னையில் தூய்மைப் பணியாளர்களுக்கு ஓய்வு அறைகள்: மு.க. ஸ்டாலின்

SCROLL FOR NEXT