முன்னணி வாகன நிறுவனங்களில் ஒன்றான டொயோட்டா கிா்லோஸ்கா் மோட்டாரின் மொத்த விற்பனை கடந்த அக்டோபா் மாதத்தில் 39 சதவீதம் அதிகரித்துள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த அக்டோபா் மாதத்தில் நிறுவனத்தின் மொத்த விற்பனை 42,892-ஆக இருந்தது. முந்தைய 2024-ஆம் ஆண்டின் இதே மாதத்தோடு ஒப்பிடுகையில் இது 39 சதவீதம் அதிகம். அப்போது நிறுவனம் 30,845 வாகனங்களை சில்லறை விற்பனையாளா்களுக்கு அனுப்பியது.
மதிப்பீட்டு மாதத்தில் நிறுவனத்தின் ஏற்றுமதி 2,635-ஆக உள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.