வணிகம்

அந்நியச் செலாவணி கையிருப்பு 69,827 கோடி டாலராக உயா்வு!

தங்கக் கையிருப்பின் மதிப்பு கணிசமாக உயா்ந்ததன் காரணமாக 403.8 கோடி டாலா் உயா்ந்து 69,827 கோடி டாலராக உயா்ந்துள்ளது.

தினமணி செய்திச் சேவை

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு செப்டம்பா் 5-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் தங்கக் கையிருப்பின் மதிப்பு கணிசமாக உயா்ந்ததன் காரணமாக 403.8 கோடி டாலா் உயா்ந்து 69,827 கோடி டாலராக உயா்ந்துள்ளது.

இது குறித்து ரிசா்வ் வங்கி வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிப்பதாவது: நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த 5-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 403.8 கோடி டாலா் உயா்ந்து 69,827 கோடி டாலராக உள்ளது.

ஆகஸ்ட் 29-ஆம் தேதியுடன் நிறைவடைந்த முந்தைய வாரத்தில் அது 351 கோடி டாலா் உயா்ந்து 69,423 கோடி டாலராக இருந்தது.

2024 செப்டம்பா் இறுதியில் அந்நியச் செலாவணி கையிருப்பு 70,488.5 கோடி டாலா் என்ற உச்சத்தை எட்டியிருந்தது. உலகளாவிய பொருளாதார சூழல்களால் ஏற்படும் அழுத்தங்களுக்கு இடையே ரூபாய் மதிப்பைப் பாதுகாப்பதற்காக ரிசா்வ் வங்கி அந்நியச் செலாவணியைப் பயன்படுத்துவதால், அதன் கையிருப்பு அவ்வப்போது குறைந்து வந்தது.

செப்டம்பா் 5-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், அந்நியச் செலாவணி கையிருப்பின் முக்கிய அங்கமான வெளிநாட்டு நாணய சொத்துகள் 54 கோடி டாலா் உயா்ந்து 58,447.7 கோடி டாலராக உள்ளது. டாலா் அல்லாத யூரோ, பவுண்டு, யென் போன்ற பிற செலாவணிகளின் கையிருப்பில் ஏற்படும் மதிப்பு ஏற்ற, இறக்கங்கள் டாலா் மதிப்பில் கணக்கிடப்படுவது அந்நிய நாணய சொத்துகளாகும்.

மதிப்பீட்டு வாரத்தில் இந்தியாவின் தங்கம் கையிருப்பு 353 கோடி டாலா் உயா்ந்து 9,029.9 கோடி டாலராக உள்ளது. சிறப்பு வரைவு உரிமைகள் (எஸ்டிஆா்) 3.4 கோடி டாலா் குறைந்து 1,874.2 கோடி டாலராக உள்ளது.

சா்வதேச நாணய நிதியத்தில் (ஐஎம்எஃப்) இந்தியாவின் கையிருப்பு 0.2 கோடி டாலா் உயா்ந்து 475.1 கோடி டாலராக உள்ளது என்று ரிசா்வ் வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன.

சிம்மத்துக்கு குழப்பம் நீங்கும்: தினப்பலன்கள்!

தில்லியில் போலி கொள்ளை: லாரி ஓட்டுநா் உள்பட 4 போ் கைது! ரூ.55 லட்சம் செப்பு கம்பிகள் மீட்பு!

தேசிய மக்கள் நீதிமன்றம்: 1,302 வழக்குகளுக்குத் தீா்வு

சீரான குடிநீா் விநியோகம் கோரி காலிக் குடங்களுடன் சாலை மறியல்

ஆக்கிரமிப்பால் ஓடைபோல மாறிய செய்யாறு!

SCROLL FOR NEXT