ரூ. 9 லட்சம் கோடி லாபம்.. ஏறுமுகத்தில் பங்குச்சந்தை! சென்செக்ஸ் 1,300 புள்ளிகள் உயர்வு!
போர்நிறுத்த பேச்சுவார்த்தைகளில் நம்பிக்கையால் மும்பை பங்குச்சந்தையில் ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருவதைப் பற்றி...
அமெரிக்கா - ஈரான் இடையேயான போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்கும் என்ற நம்பிக்கையில் மும்பை பங்குச்சந்தை ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது.
அமெரிக்கா - ஈரான் இடையேயான போர்நிறுத்தப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால், சில நாள்களாக இறங்குமுகத்தில் இருந்த மும்பை பங்குச்சந்தை மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்கும் என்ற நம்பிக்கையில் எழுச்சிப் பெறத் தொடங்கியுள்ளது.
புதன்கிழமை காலை 9.30 மணியளவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,189.51 புள்ளிகள் உயர்ந்து 78,237.08 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 366.40 புள்ளிகள் உயர்ந்து 24,209.05 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகிறது. இதனால், முதலீட்டாளர்களுக்கு ஒரே நாளில் ரூ. 9 லட்சம் கோடி வரை லாபம் கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
Advertisement
சென்செக்ஸில் இண்டிகோ, அல்ட்ராடெக் சிமெண்ட், எல் அண்ட் டி, பஜாஜ் பைனான்ஸ், இஸ்ஃபோசிஸ், ஏசியன் பெயிண்ட்ஸ் மற்றும் பஜாஜ் பின்செர்வ் ஆகியவை 2 முதல் 4 சதவிகிதம் வரை லாபம் ஈட்டின. இவற்றுள் ஐசிஐசிஐ வங்கி மட்டும் சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது.
அமெரிக்கா - ஈரான் பேச்சுவார்த்தையால் கச்சா எண்ணெய் விலை மிகப் பெரியவைச் சந்தித்திருக்கிறது. நேற்றிரவு பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 100 டாலர்களில் இருந்து 95 டாலராகவும், டபிள்யூடிஐ கச்சா எண்ணெய் விலை 91 டாலராகவும் சரிந்தது.