டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 93.23 ஆக உயர்வு!
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்துள்ளது பற்றி...
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று(வியாழக்கிழமை) 10 பைசா உயர்ந்து 93.23 ஆக உள்ளது.
ஈரான் - இஸ்ரேல் இடையேயான போர், பங்குச்சந்தை வீழ்ச்சி, கச்சா எண்ணெய் விலை உயர்வு ஆகியவற்றால் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து கடும் வீழ்ச்சியைச் சந்தித்து வந்தது.
அதிகபட்சமாக இந்திய ரூபாயின் மதிப்பு 95.21 என்ற வரலாற்றுச் சரிவை எட்டியிருந்த நிலையில் ரிசர்வ் வங்கி, அந்நியச் செலாவணி வர்த்தகத்தைக் கட்டுப்படுத்தியது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்ட நிலையில் ரூபாயின் மதிப்பு படிப்படியாக உயர்ந்து வருகிறது.
Advertisement
இன்று வர்த்தக நேர தொடக்கத்தில் 93.29 ஆக இருந்த ரூபாயின் மதிப்பு வர்த்தக இடையே 93.16 என்ற அதிகபட்ச உயர்வை எட்டியது. அதேபோல 93.35 எனும் வீழ்ச்சியையும் சந்தித்தது.
எனினும் வர்த்தக நேர முடிவில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 10 பைசா உயர்ந்து 93.23 ஆக நிறைவு பெற்றது. கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதால் இந்திய ரூபாயின் மதிப்பு சற்று உயர்ந்துள்ளது.
புதன்கிழமை இந்திய ரூபாயின் மதிப்பு 2 பைசா உயர்ந்து 93.33 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.