ரூபாய் மதிப்பு உயர்வு: 1 டாலர் - ரூ. 95.36! 25 காசுகள் உயர்வு!
அந்நிய செலவானி வர்த்தகத்தில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 25 காசுகள் உயர்ந்து ரூ. 95.36 ஆக நிறைவு.
மும்பை: அமெரிக்கா-ஈரான் இடையிலான மோதலில் இருதரப்பும் தற்காலிகப் போர் நிறுத்தத்தைக் கடைப்பிடித்து வரும் நிலையில், கச்சா எண்ணெய் விலை மற்றும் அமெரிக்க டாலர் குறியீடு ஆகியவை அவற்றின் உச்ச நிலையிலிருந்து சரிந்த நிலையில், அதன் விளைவாக, இன்றைய வர்த்தகத்தில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 25 காசுகள் உயர்ந்து ரூ. 95.36 ஆக நிறைவடைந்தது.
மேற்கு ஆசியப் பகுதியில் பதற்றத்தைத் தணிக்கும் வகையில் போர் நிறுத்த ஒப்பந்தம், இந்திய ரிசர்வ் வங்கியின் தலையீடு, உள்நாட்டு பங்குச் சந்தைகளின் சாதகமான போக்கு மற்றும் அமெரிக்க கருவூலப் பத்திரங்களின் வருவாய் சரிவு உள்ளிட்டவையால் ரூபாயின் மதிப்பு உயர்ந்ததாக அந்நியச் செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ரூ. 95.47 என்ற நிலையில் வர்த்தகம் தொடங்கிய நிலையில், பிறாகான வர்த்தகத்தில், அதிகபட்சமாக ரூ. 95.23 வரையிலும், குறைந்தபட்சமாக ரூ. 95.67 வரை சென்றது. இறுதியில், அதன் முந்தைய நாள் நிறைவு விலையிலிருந்து 25 காசுகள் உயர்ந்து ரூ. 95.36 என்ற நிலையில் வர்த்தகம் நிறைவடைந்தது.
Advertisement
Advertisement
முன்னதாக நேற்று (திங்கள்கிழமை) டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 43 காசுகள் சரிந்து ரூ. 95.61 ஆக நிறைவடைந்தது.
The rupee appreciated 25 paise to close at 95.36 against the US dollar on Tuesday.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.