டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 18 காசுகள் உயர்ந்து ரூ. 96.55 ஆக நிறைவு!
இன்றைய வர்த்தகத்தில் ரூபாயின் மதிப்பு 18 காசுகள் உயர்ந்து ரூ. 96.55 ஆக நிறைவு.
மும்பை: ரிசர்வ் வங்கியின் தலையீட்டிற்கு மத்தியில், இன்றைய வர்த்தகத்தில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 18 காசுகள் உயர்ந்து ரூ. 96.55 ஆக நிறைவுபெற்றது.
மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்றம் அதை தொடர்ந்து ளெளியேறி வரும் வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் உள்நாட்டு பங்குச் சந்தைகளில் நீடிக்கும் எதிர்மறை மனநிலை உள்ளிட்ட பல்வேறு காரணத்தால் ரூபாயின் மதிப்பின் மீதான அழுத்தம் தொடர்ந்ததாக அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
வங்கிகளுக்கு இடையிலான அந்நிய செலாவணி சந்தையில், ரூபாயின் மதிப்பு ரூ. 96.81 என்ற பலவீனமான நிலையில் வர்த்தகத்தைத் தொடங்கியது. பிறகு ரூ. 96.30 முதல் ரூ. 96.81 என்ற வரம்பில் வர்த்தகமானது. இறுதியில் அதன் முந்தைய நாள் நிலையை விட 18 காசுகள் உயர்ந்து ரூ. 96.55 ஆக நிலைபெற்றது.
Advertisement
Advertisement
நேற்றைய வர்த்தகத்தில், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 20 காசுகள் சரிந்து ரூ. 96.73 ஆக நிறைவடைந்தது.
The rupee recovered 18 paise to close at 96.55 against the US dollar on Friday.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.