டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.42 ஆக நிறைவு!
டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.42 ஆக நிறைவு.
மும்பை: வெளிநாடுகளில் டாலருக்கு நிகரான பிற நாடுகளின் நாணய மதிப்புகள் சரிந்ததையடுத்து, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.42 ஆக நிலைபெற்றது.
அரசியலில் நிச்சயமற்ற சூழலில், வெளிநாட்டு முதலீடுகள் வெளியேறி வருவதும் மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு ஆகியவற்றால், இந்திய ரூபாய் மதிப்பு அழுத்தத்தில் இருந்ததாக அந்நியச் செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ரூ. 95.39 என்ற நிலையில் வர்த்தகம் தொடங்கியது. பிறகான வர்த்தகத்தில், ரூபாய் மதிப்பு ரூ. 95.38 முதல் 95.44 என்ற வரம்பிற்குள் வர்த்தகமானது. இறுதியில், நேற்றைய வர்த்தக நாள் முடிவை விட 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.42 ஆக நிறைவடைந்தது.
Advertisement
Advertisement
நேற்றைய வர்த்தகத்தில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 12 காசுகள் சரிந்து ரூ. 95.45 ஆக நிறைவு பெற்றது.
The rupee appreciated 3 paise to close at 95.42 against US dollar on Friday.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.