ஜேபிவிஎல் 4வது காலாண்டு இழப்பு ரூ. 13.37 கோடி!
மார்ச் வரையான காலாண்டில் நிறுவனம் ரூ. 13.37 கோடி ஒருங்கிணைந்த நிகர இழப்பை சந்தித்ததாக ஜெய் பிரகாஷ் பவர் வென்ச்சர்ஸ் இன்று தெரிவித்தது.
புதுதில்லி: அதிகப்படியான செலவுகள் காரணமாக, மார்ச் வரையான காலாண்டில் நிறுவனம் ரூ. 13.37 கோடி ஒருங்கிணைந்த நிகர இழப்பை சந்தித்ததாக ஜெய் பிரகாஷ் பவர் வென்ச்சர்ஸ் லிமிடெட் இன்று தெரிவித்தது.
மார்ச் 2025 உடன் முடிவடைந்த காலாண்டில், நிறுவனம் ரூ. 155.67 கோடி ஒருங்கிணைந்த நிகர லாபத்தைப் ஈட்டியிருந்தது.
நிறுவனத்தின் மொத்தச் செலவு, கடந்த ஆண்டு இதே காலாண்டில் இருந்த ரூ. 1,165.75 கோடியிலிருந்து, இக்காலாண்டில் ரூ. 1,468.81 கோடியாக உயர்ந்தது.
Advertisement
Advertisement
நிறுவனத்தின் மொத்த வருவாய் கடந்த ஆண்டு இதே காலகட்டத்திலிருந்த ரூ. 1,366.67 கோடியிலிருந்து உயர்ந்து, ரூ. 1,470.79 கோடியாக அதிகரித்தது.
2025-26 நிதியாண்டில், நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இருந்த ரூ. 813.55 கோடியிலிருந்து ரூ. 450.63 கோடியாகக் சரிந்தது குறிப்பிடத்தக்கது.
Jaiprakash Power Ventures Ltd reported a consolidated net loss of Rs 13.37 crore in the March quarter due to higher expenses.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.