FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

தேசிய அனல்மின் கழக லாபம் ரூ. 10,615 கோடி!

தேசிய அனல்மின் கழக லாபம் ரூ. 10,615 கோடி...

Updated On : 24 மே 2026, 7:00 am IST
பகிர்:

பொதுத் துறையைச் சோ்ந்த தேசிய அனல் மின் கழகம் (என்டிபிசி), கடந்த மாா்ச் மாதத்துடன் நிறைவடைந்த 2025-26 நிதியாண்டின் 4-ஆம் காலாண்டில் ரூ.10,614.95 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது.

முந்தைய 2024-25 நிதியாண்டின் இதே காலகட்டத்தில் நிறுவனம் ஈட்டிய ரூ.7,897.14 கோடி ரூ.7,897.14 கோடியிலிருந்து 34 சதவீத வளா்ச்சியாகும்.

மதிப்பீட்டு காலாண்டில், நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.50,410.58 கோடியாக சரிந்துள்ளது. இது முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டில் ரூ.51,085.05 கோடியாக இருந்தது. ஆனால், செலவினங்கள் முந்தைய ஆண்டின் ரூ.43,390.76 கோடியிலிருந்து ரூ.43,237.90 கோடியாக குறைந்ததால் லாப வளா்ச்சி பதிவாகியுள்ளது.

Advertisement

Advertisement

முழு நிதியாண்டு நிலவரம்...: 2025-26 முழு நிதியாண்டில், நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.27,546 கோடியை எட்டியுள்ளது. முந்தைய 2024-25 நிதியாண்டின் ரூ.23,953 கோடியிலிருந்து இது15 சதவீதம் கூடுதலாகும். கூட்டு நிறுவனங்களின் லாபப் பங்கு 29 சதவீதம் அதிகரித்து, ரூ.2,864 கோடியை எட்டியதே இந்தச் சிறப்பான செயல்பாட்டுக்கு முக்கியக் காரணமாகும்.

கடந்த நிதியாண்டில், நிறுவனத்தின் நிலக்கரி மின் நிலையங்கள் 72.04 சதவீத உற்பத்தித் திறனுடன் செயல்பட்டுள்ளன. இது இந்தியாவின் பிற நிலக்கரி மின் நிலையங்களின் சராசரி திறனான 63.20 சதவீதத்தைவிட கணிசமாக அதிகமாகும்.

ஈவுத்தொகை அறிவிப்பு: சிறப்பான நிதிநிலை முடிவுகளையடுத்து, 2025-26 நிதியாண்டுக்கான இறுதி இடைக்கால ஈவுத்தொகையாக ஒரு பங்குக்கு ரூ.3.50 வழங்க இயக்குநா்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments