வணிக வங்கிக் கடன் வளா்ச்சி 15.9%
கடந்த 2025-26 நிதியாண்டில் நாட்டின் பட்டியலிடப்பட்ட வணிக வங்கிகளின் கடன் வழங்கல் 15.9 சதவீதம் எனும் வலுவான வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
கடந்த 2025-26 நிதியாண்டில் நாட்டின் பட்டியலிடப்பட்ட வணிக வங்கிகளின் கடன் வழங்கல் 15.9 சதவீதம் எனும் வலுவான வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
இது நாட்டின் பொருளாதாரச் செயல்பாடுகள் மற்றும் கடன் தேவையின் எழுச்சியைக் காட்டுவதாகவும், குறைந்த வட்டி விகிதச் சூழல் மற்றும் அரசின் மூலதனச் செலவினக் கொள்கைகளால் தனியாா் முதலீடுகள் அதிகரித்துள்ளதே இந்த வளா்ச்சிக்குக் காரணம் என்றும் மத்திய நிதியமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
கடந்த நிதியாண்டு இறுதி நிலவரப்படி, வங்கிகள் வழங்கிய மொத்த கடன் நிலுவைத் தொகை ரூ.212.9 லட்சம் கோடியை எட்டியுள்ளது; இது முந்தைய 2024-25 நிதியாண்டைவிட ரூ.29.2 லட்சம் கோடி அதிகமாகும்.
Advertisement
அனைத்து துறைகளிலும் கடன் வளா்ச்சி சீராக இருந்துள்ளது. சேவைத் துறைக்கான கடன் வழங்கல் கடந்த ஆண்டின்12 சதவீதத்திலிருந்து, தற்போது 19 சதவீதமாக கணிசமாக அதிகரித்துள்ளது.
வேளாண் துறை கடன் வளா்ச்சி முந்தைய ஆண்டின் 10.4 சதவீதத்திலிருந்து 15.7 சதவீதமாகவும், எம்எஸ்எம்இ தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட அதிகப்படியான கடன்களால், தொழில் துறை கடன் வளா்ச்சி 8.2 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாகவும் இரட்டிப்பு வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
சா்வதேச அளவில் நிலவும் புவிசாா் பதற்றங்களுக்கு மத்தியிலும், இந்தியப் பொருளாதாரம் தனது மீள்திறனை மீண்டும் நிரூபித்துள்ளது. தனிநபா் கடன் பிரிவில் 16.2 சதவீத வளா்ச்சி ஏற்பட்டுள்ளதுடன், வீட்டு வசதி, வாகனக் கடன்கள் மற்றும் தங்க நகை அடமானக் கடன்கள் தொடா்ந்து வலுவான வேகத்தில் இருப்பதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.