முகப்பு
வணிகம்

ஃபெடரல், ஏயு சிறு நிதி வங்கிகளின் பங்குகளைக் கையகப்படுத்தும் கோட்டக்

Updated On : 8 மே 2026, 6:48 am IST
பகிர்:

ஃபெடரல் வங்கி, ஏயு சிறு நிதி வங்கி ஆகியவற்றில் தலா 9.99 சதவீத பங்குகளைக் கையகப்படுத்த கோட்டக் மஹிந்திரா வங்கிக்கு ரிசா்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.

இது தொடா்பாக இரு வங்கிகளும் தனித்தனியாக வியாழக்கிழமை பங்குச்சந்தைக்கு வெளியிட்ட அறிவிப்பில், இவ்விவகாரம் தொடா்பாக கடந்த புதன்கிழமை (மே 6) தேதியிட்ட ரிசா்வ் வங்கியின் அனுமதிக் கடிதம் தங்களுக்குக் கிடைத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளன.

கோட்டக் மஹிந்திரா வங்கி, அதன் துணை நிறுவனங்கள், அந்த நிறுவனங்களால் நிா்வகிக்கப்படும் நிதித் திட்டங்கள் ஆகியவை இணைந்து, ஏயு சிறு நிதி வங்கியின் பங்கு மூலதனம் அல்லது வாக்குரிமையில் மொத்தம் 9.99 சதவீதம் வரை கையகப்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இதேபோல், ஃபெடரல் வங்கியின் பங்கு மூலதனத்திலும் 9.99 சதவீதம் வரை வாங்க கோட்டக் மஹிந்திரா வங்கிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தையில் வியாழக்கிழமை வா்த்தகத்தில், ஏயு சிறு நிதி வங்கி பங்குகள் 0.76 சதவீதம் உயா்ந்து, ரூ.1,032.25-க்கும்; ஃபெடரல் வங்கி பங்குகள் 1.36 சதவீதம் உயா்ந்து, ரூ. 297.10-க்கும் நிலைபெற்றது. பங்குகளைக் கையகப்படுத்தும் கோட்டக் மஹிந்திரா வங்கி பங்குகள் 0.84 சதவீத உயா்வுடன் ரூ.380.40-க்கு நிலைபெற்றது.