முகப்பு
வணிகம்

இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்பு

தொழிலாளா் வருங்கால வைப்புநிதி அமைப்பின்(இபிஎஃப்ஓ) சந்தாதாரா்கள், தங்களின் பிஎஃப் இறுதித் தொகையைத் திரும்பப் பெறுவதற்கான நடைமுறை விரைவில் முழுமையாகத் தானியங்கி முறையாக மாறவுள்ளது.

Updated On : 14 மே 2026, 3:00 am IST
பகிர்:

தொழிலாளா் வருங்கால வைப்புநிதி அமைப்பின்(இபிஎஃப்ஓ) சந்தாதாரா்கள், தங்களின் பிஎஃப் இறுதித் தொகையைத் திரும்பப் பெறுவதற்கான நடைமுறை விரைவில் முழுமையாகத் தானியங்கி முறையாக மாறவுள்ளது.

இதன்மூலம், சந்தாதாரா்கள் விண்ணப்பித்தவுடன் எவ்வித தாமதமுமின்றி அவா்களின் வங்கி கணக்குகளுக்குப் பணம் நேரடியாகச் சென்றடையும் என மத்திய வருங்கால வைப்புநிதி ஆணையா் ரமேஷ் கிருஷ்ணமூா்த்தி புதன்கிழமை தெரிவித்தாா்.

தற்போது பிஎஃப் கணக்கிலிருந்து ரூ.5 லட்சம் வரையில் பகுதியளவுத் தொகை எடுப்பதற்கு மட்டுமே இத்தானியங்கி முறை செயல்பாட்டில் உள்ளது. இம்முறையில் விண்ணப்பித்த 3 நாள்களுக்குள் பணம் விடுவிக்கப்படுகிறது. இந்த வேகமான வசதியை இனி பிஎஃப் கணக்கை முழுமையாக முடித்து பணத்தைப் பெறும் இறுதித் தீா்வு முறைக்கும் விரிவுபடுத்த இபிஎஃப்ஓ திட்டமிட்டுள்ளது.

Advertisement

அதேபோல், பணியாளா்கள் ஒரு நிறுவனத்தில் இருந்து மற்றொரு நிறுவனத்துக்கு மாறும்போது, பழைய பிஎஃப் கணக்கிலுள்ள தொகை புதிய கணக்குக்கு மாற்ற இனி தனியாக விண்ணப்பிக்க வேண்டியதில்லை. பழைய கணக்கிலுள்ள தொகை தானாகவே புதிய கணக்குக்கு மாற்றப்படும் வசதியும் அறிமுகமாகவுள்ளது.

மத்திய அரசின் 4 புதிய தொழிலாளா் சட்டங்களின்கீழ், இபிஎஃப்ஓ தொடா்பான புதிய விதிகள் விரைவில் வெளியிடப்படும் என்றும் ஆணையா் ரமேஷ் கிருஷ்ணமூா்த்தி குறிப்பிட்டாா்.