புகை நமக்குப் பகை இளைஞர்களே...
இன்று ஏடு தூக்கிச் செல்லும் மாணவர்களே நாளை நாடு காக்கும் தலைவராகிறார்கள். எனவேதான், இக்கால மாணவர்களை நாளைய நம்பிக்கை நட்சத்திரங்கள் என்றும், எதிர்காலத் தூண்கள் என்றும் அழைக்கிறோம்.
இன்று ஏடு தூக்கிச் செல்லும் மாணவர்களே நாளை நாடு காக்கும் தலைவராகிறார்கள். எனவேதான், இக்கால மாணவர்களை நாளைய நம்பிக்கை நட்சத்திரங்கள் என்றும், எதிர்காலத் தூண்கள் என்றும் அழைக்கிறோம். இன்றைய இளைஞர்களே நாளைய குடிமக்கள், குடியரசின் தலைவர்கள். மாணவர்கள் நல்ல வழியில் நடத்தலை நன்னடத்தை என்று பண்டைய நூல்கள் தெரிவிக்கின்றன. நன்னடத்தை பயிலுதலையே ஒழுக்கம் என்பர். ஒழுக்கம் உயர்ந்த பழக்க வழக்கங்களை என்றும் அழியாமல் காக்கும். பள்ளியில் பயிலும் காலத்திலேயே மாணவர்கள் நல்ல பழக்க வழக்கங்களைக் கற்று கொள்ள வேண்டும். ஓழுக்கம் உடையவர்கள் உயர்வார்கள், ஒழுக்கமற்றவர்கள் தாழ்வார்கள் என்பது தான் தீய பழக்கங்கள் உணர்த்தும் பாடம்.
ஒரு சிகரெட்டில் நிகோடின், கார்பன்-டை-ஆக்ûஸடு, பிரிடின் பைரின், கார்பன் மோனாக்ûஸடு, அமோனியா, ஆர்செனிக், மீத்தேன், பிரஸ்லிக் அமிலம், பார்மிக் அமிலம், கிரிஸால், பைரால், ரூபிடின், மெதிலின் பர்பரோல், பைக்கோலின், பார்வோலின், ஓட்டிடைப், சல்புரேடேட் ஹைடிரஜன், சப்பரிடேட், லுனைன், விரிடைன், மைதிலைமின், பார்மால் டிரையுட், பார்பிக் ஆல்டிஹைட், வெடியுப்பு, மரிஜீவானா, அக்ரோலின், மார்ங்காஸ், கொரிடீன் போன்ற நச்சுப் பொருள்கள் உள்ளன.
புகைப் பிடித்தாலோ, புகையிலைப் பொருள்களைப் பயன்படுத்தினாலோ சுவாசக் குழாயில் சளி ஏற்பட்டு, இருமலாகி புண் தோன்றும், நுரையீரலில் கட்டி ஏற்பட்டு, காச நோய் ஏற்பட்டு, இறுதியில் புற்றுநோய் ஏற்படும். இவை தவிர ஞாபக சக்தியை இழத்தல், மலட்டுத் தன்மை, தோலில் சுருக்கம், கை, கால் நடுக்கம் போன்றவைகளும் ஏற்படும். கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டு காமாலை நோயையும் ஏற்படுத்தும். குடற்புண், வாய்ப்புண் ஏற்படுவதோடு, நாக்கு வறண்டு சுவையையிழக்கும். பற்கள் பலமிழந்து, பல் ஈறு சம்பந்தமான நோய்கள் ஏற்படும். கண் பார்வை மங்கி, கண் புகைச்சல், கண் எரிச்சல், போன்றவை ஏற்பட்டு, கண் நரம்புகளில் சளி கோர்த்து வறட்சி உண்டாகி கண் பார்வை பறிபோகும்.
Advertisement
இறுதியில் இரத்தம் ஓட்டம் பாதிப்படைந்து இதயம் செயலிழந்து மாரடைப்பு ஏற்படும். பண விரயத்துடன், நேரத்தையும் செலவிட்டு, இப்படி உடலையும், உள்ளத்தையும் கெடுத்து, உயிரை எடுக்கும் புகையிலையை புகைக்க, புகையிலை தொடர்பான பொருள்களைச் சுவைக்க வேண்டுமா என்பதை இளைஞர்கள் சிந்திக்க வேண்டும்.
சுவர் இருந்தால் தானே சித்திரம் வரைய முடியும்? அது போல உடல் நலமாயிருந்தால் தான் உழைத்து வாழ முடியும். இக்கால மாணவர்கள் தெரிந்தோ, தெரியாமலோ, சில பல தீய பழக்கங்களுக்கு அடிமையாகி உடலைக் கெடுத்து நோயின் பிடியில் சிக்கி இறுதியில் வாழ்க்கையை இழந்து தங்கள் குடும்பத்தை நிராதரவாக விட்டுச் செல்கிறார்கள். நல்லுடலும், நல்லுள்ளமும் அமைய வேண்டுமாயின் தீய பழக்கங்கள் மறைய வேண்டும்.
தமிழகத்தில் 11 வயதிலிருந்து 15 வயதுக்குட்பட்ட மாணவர்களில் 3 சதவீதம் பேர் புகையிலை மற்றும் புகைப் பழக்கத்துக்கு அடிமையாகியிருக்கிறார்கள் என்று சமீபத்திய புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற மேலை நாடுகளில் 50 சதவீதமாக இருந்த புகைப் பழக்கம் தற்போது 20 சதவீதமாகக் குறைந்துள்ளது. ஆனால், இந்தியாவில் புகைப்பழக்கம் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் 24 சதவீத ஆண்களும், 8 சதவீத பெண்களும் புகையிலை மற்றும் புகைப் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளனர். புகைப்பிடித்தல் என்பது கெüரவமாகவும், வீரத்திற்கு அடையாளமாகவும் இக்கால இளைஞர்களால் கருதப்படுகிறது. இதைத் தடுக்கும் பொறுப்பு பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கு அதிகமாக இருக்கிறது. மற்றவர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ வேண்டிய பெற்றோர்களும், ஆசிரியர்களும் எந்தவித கெட்ட பழக்க வழக்கங்களுக்கும் ஆளாகாமல் இருந்து மாணவர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ வேண்டும். குழந்தைகள் முன்பு புகையிலைப் பொருள்களை உபயோகிக்கக் கூடாது. அப்பழக்கம் இருந்தாலும் உடல் நலம் கருதி உடனடியாகக் கைவிடுதல் நல்லது. குழந்தைகளுக்கு புகையிலை குறித்த விழிப்புணர்வை பள்ளிகளிலும், வீடுகளிலும் ஏற்படுத்த வேண்டும். 18 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு புகையிலைப் பொருள்களை வழங்கக் கூடாது என அரசு எச்சரித்தும் பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே இப்பழக்கம் அதிகரித்து வருவது அவர்களிடையே இன்னும் விழிப்புணர்வு வளராமையைத்தான் காட்டுகிறது.
இந்தக் கொடிய பழக்கத்தை அரசு மட்டும் தலையிட்டு தடுக்க முடியாது. ஒவ்வொரு தனி மனிதனுக்கும் இதில் பங்கு உண்டு. பள்ளிக் கூடங்கள் மற்றும் கல்லூரிகள் அருகே புகையிலை மற்றும் இதர போதைப் பொருள்கள் விற்பதைத் தடை செய்ய வேண்டும். திரைப்பட கதாநாயகர்கள் கண்டிப்பாகத் திரைப்படங்களில் புகைபிடிப்பது போன்றோ, மது அருந்துதல் போன்றோ நடிக்கக் கூடாது. நகைச்சுவை என்ற பெயரில் பல தீய பழக்கங்களை திரையில் காட்டவோ, பேசவோ கூடாது. குடிப்பது, புகைப்பிடிப்பது, குற்றச் செயல்களைப் புரிவது, கொலை வெறியேடு பழிவாங்குவது போன்ற காட்சிகளைத் தொலைகாட்சிகள், திரைப்படங்களில் இடம் பெறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இந்தக் காட்சிகள் இளைஞர்கள் மனதில் பசுமரத்தாணி போல் பதிந்து தீயச் செயல்களைப் புரிய தூண்டுகின்றன. தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்களில் புகைப்பிடித்தல் போன்ற காட்சிகள் வரும்போது, புகை உடலுக்கு பகை, புகை புற்று நோயை உண்டாக்கும் என்று காட்டுகிறார்கள். இத்தகைய வாசகங்கள் விழிப்புணர்வு ஊட்ட இல்லாமல் வெறும் சடங்காக மட்டுமே காட்டப்படுகின்றன. அந்தக் காட்சிகளை கண்ணுறும் இளைஞர்கள் புகைப்பிடித்தால் கதாநாயகனைப் போல் நாமும் ஆகலாம், துயரம் மறையும், வீரம் பிறக்கும், பலர் நம்மையும் மெச்சுவார்கள் என மனப்பால் குடித்து, அந்தத் தீய பழக்கத்திற்கு உள்ளாகிறார்கள்.
சிகரெட், பான்பராக், குட்கா, ஹான்ஸ் போன்றவற்றை உடல்உழைப்புத் தொழிலாளர்களும், இளைஞர்களும்தான் பெருமளவில் பயன்படுத்துகிறார்கள். சமுதாயத்திற்குத் தீங்கு விளைவிக்கும் இத்தகைய புகைப் பொருள்களை முற்றிலுமாகத் தடைசெய்ய வேண்டும். புகைபிடித்தல், புகையிலைப் பொருள்களை உண்பது என்பது என்றும் இடும்பைத் தரும். புகையிலையால் ஏற்படும் பல்வேறு வகையான நோய்களைத் தடுக்கும் வண்ணம், குட்கா, பான் மசாலா போன்ற சுவைக்கும் புகையிலைப் பொருட்களைத் தயாரிக்கவும், சேமித்து வைக்கவும், விநியோகம் செய்யவும், விற்கவும் தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நடவடிக்கை தமிழகத்தில் நோயற்ற சமுதாயத்தை உருவாக்கும் என்பதில் ஐயமில்லை. தொழிற்சாலைகள் மற்றும் அலுவலகங்களுக்கு அருகில் புகையிலைப் பொருள்கள் உபயோகிப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பணி புரியும் வளாகத்துக்குள் புகையிலே உபயோகிப்போருக்கு அபராதம் விதிப்பது போன்ற விழிப்புணர்வுப் பலகைகள் அமைப்பது, புகை பிடிப்பதெற்கென உருவாக்கப்பட்ட இடங்களைத் தடை செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
சிறுவர்கள் புகைபிடித்தாலோ, புகையிலைப் பொருள்களை உபயோகப்படுத்தினாலோ அது மூளையை பெருமளவு பாதிப்பதோடு, கடந்தகால நிகழ்வுகளையும், நிகழ் காலத்தையும் இணைத்துப் பேசும் நினைவாற்றலை இழந்துவிடுவார்கள் என இங்கிலாந்து விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 14 லட்சம் பேர் புகையிலைப் பொருள்களைப் பயன்படுத்துவதால் இறப்பதோடு, 60 லட்சம் பேர் பல்வேறு நோய்களுக்கும் ஆளாகிறார்கள். ஒரு சிகரெட்டை புகைத்தால் அவருக்கு மரணம் 5.5 நிமிடம் முன்னோக்கி வருகிறது என்றும், அதைவிடக் கொடுமை அவருக்கு அருகிலிருப்பவர்களுக்கு 7 நிமிடம் முன்னோக்கி வருகிறது எனவும் யூனிசெப் நிறுவனம் எச்சரிக்கிறது.
புகைப் பிடிக்கும் எண்ணம் தோன்றினால் காய்கறி சாலட், காரட், வெள்ளரி, வெங்காயம் சாப்பிடலாம். அதுவும் சாப்பிட முடியாதவர்கள் தண்ணீர் அருந்தலாம். இதனால் சிகரெட் பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் குறையும்.