முகப்பு
கிச்சன் கார்னர்

மோர்க் குழம்பு

செய்முறை: அடி கனமான பாத்திரத்தில் மோரை விட்டு, அரைத்த தேங்காய் கலவை, மஞ்சள்தூள், உப்பு போட்டு

Updated On : 26 மே, 2016 at 2:28 PM
பகிர்:

தேவையானவை:

மோர் - ஒரு கிண்ணம்

தேங்காய் துண்டுகள் - 2

Advertisement

பொட்டுக்கடலை -1 தேக்கரண்டி

பச்சை மிளகாய் - 3

பூண்டு - 1 பல்

இஞ்சி - சிறிய துண்டு

சீரகம் - 2 தேக்கரண்டி (இவற்றை ஒன்றாகச் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்)

மஞ்சள்தூள், வெந்தயம் - தலா அரை தேக்கரண்டி

கறிவேப்பிலை, பெருங்காயம்

வெண்டைக்காய் (அ) கத்திரிக்காய் வத்தல் (எண்ணெய்யில் வறுத்துக் கொள்ளவும்)

வெள்ளரிக்காய், கொத்துமல்லி - சிறிதளவு

கடுகு, உளுத்தம்பருப்பு  தலா - 1 தேக்கரண்டி

எண்ணெய் - 1 குழிக்கரண்டி

உப்பு - தேவையான அளவு.

செய்முறை: அடி கனமான பாத்திரத்தில் மோரை விட்டு, அரைத்த தேங்காய் கலவை, மஞ்சள்தூள், உப்பு போட்டு அடுப்பில் வைத்து மிதமான தீயில் கிளறவும். கலர் மாறியதும், சிறிது தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து, வறுத்த வத்தல், வெள்ளரிக்காயைச் சேர்த்து கொதிக்க வைத்து இறக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, வெந்தயம், பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வறுத்து குழம்பில் கொட்டி, கொத்துமல்லி தூவி பரிமாறவும்.

••

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.