முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 259

தாருகாசுரன் ஆனைமுகத்தவன்; யானைக்கு  அதன் துதிக்கை பனைமரத்தை ஒத்திருப்பதால் பனைக்கை என்று பெயர்.  கொக்கு என்றால் மாமரம் என்றும் பொருளுண்டு. 

Updated On : 1 ஜூன், 2016 at 6:03 PM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 10:54 PM

பதச் சேதம்

சொற் பொருள்

எனக்கு சற்று உனக்கு சற்று என கத்து அத்தவர்க்கு இச்சை பொருள் பொன் தட்டு இடு இக்கை குக்குடில் மாயம் என

Advertisement

 

அத்தவர்: விலைமகளிர்; இக்கை: ஆபத்தான; குக்குடில்: கு குடில், சிறுமை நிறைந்த குடிலான உடல்; மாயம் என: (உயிர்) மாயமாய் மறைந்ததும்;

கட்டைக்கு இடைப்பட்டிட்டு அனல் சுட்டிட்டு அடக்கைக்கு பிறக்கைக்கு தலத்தில் புக்கு இடியா முன்

 

 

அடைக்கைக்கு: அடங்குவதற்கு; தலத்தில் புக்கு: உலகத்தில் புகுந்து; இடியாமுன்: இடிபடும் (அழியும்) முன்னே;

தினைக்குள் சித்திர கொச்சை குற தத்தை தனத்தை பொற்பெற செச்சை புயத்து ஒப்பித்து அணிவோனே

 

கொச்சை: மழலை; குறத் தத்தை: குற மகளான கிளி—வள்ளி; பொற்பெற: பொற்பு உற, அழகாக; செச்சை: வெட்சி, வெட்சி மாலை; ஒப்பித்து: (ஒப்படைத்ததை) ஏற்று;

செருக்கி சற்று உறுக்கி சொல் பிரட்ட துட்டரை தப்பி திரள் தப்பி கழல் செப்ப திறல் தாராய்

 

செருக்கி: கர்வப்பட்டு; உறுக்கி: கோபித்து; சொல்: பேசுகிற; பிரட்ட: புரட்டு; திரள்: கூட்டம்; திறல்: வல்லமை;

பனைக்கை கொக்கனை தட்டு பட குத்தி பட சற்ப பணம் துட்க கடல் துட்க பொரும் வேலா

 

பனைக்கை: துதிக்கை(யை உடைய தாருகாசுரன்); கொக்கன்: இழிவுக் குறிப்பு, கொக்கு போன்றவன் (அல்லது) கொக்கு=மாமரம், மாமரமாய் நின்ற சூரபத்மன் (விளக்கத்தில் காண்க); தட்டுப்பட: தடைப்படுமாறு; சற்ப: சர்ப்ப—ஆதிசேடன்; பணம்: நாகத்தின் படம்; துட்க: அஞ்ச;

பரப்பு அற்று சுருக்கு அற்று பதைப்பு அற்று திகைப்பு அற்று பலிப்ப பத்தருக்கு ஒப்பித்து அருள் வாழ்வே

 

பரப்பு: பேராசை; சுருக்கு: கஞ்சத்தனம்; பலிப்ப: பலிக்க; ஒப்பித்து: ஒப்படைத்து;

கனிக்கு திக்கு அனைத்து சுற்றிட பச்சை கன பக்ஷிக்கு இடை புக்கு களிப்புக்கு திரிவோனே

 

கனிக்கு: மாங்கனிக்காக; கன பக்ஷி: பெருமைவாய்ந்த பறவையான மயில்; இடைப்புக்கு: ஏறி அமர்ந்து; களி புக்கு: மகிழ்ச்சி அடைந்து;

கலிக்கு ஒப்பு இல் சலிப்பு அற்று கதிக்கு ஒத்திட்ட எழில் சத்தி கடல் கச்சி பதி சொக்க பெருமாளே.

 

கலி: கலியுகம்; கச்சி: காஞ்சி; சொக்கப் பெருமாள்: அழகிய பெருமாள்;

</p><p align="justify"><iframe height="200" src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/266896422&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" width="50%" /></p><p align="justify"><strong>எனக்குச்சற்று உனக்குச்சற்றெனக் கத்து அத்தவர்க்கு</strong> ... ‘எனக்குக் கொஞ்சம், ‘உனக்குக் கொஞ்சம்’ என்று இரைச்சலிட்டுக் கூவும் விலைமாதர்களுக்கு,</p><p align="justify"><strong>இச்சைப்பொருட் பொற்தட்டு இடு இக்கைக் குக்குடில்</strong> ... அவர்கள் விரும்புகின்ற பொருளையெல்லாம் தங்கத் தட்டில் இட்டுத் தருகின்றதும், ஆபத்து நிறைந்ததுமான இந்த உடல்,</p><p align="justify"><strong>மாயம் எனக் கட்டைக்கு இடைப்பட்டிட்டு அனற்சுட்டிட்டு அடக்கைக்கு</strong> ... (உயிர்) மாயமாக மறைந்ததுமே, விறகுக் கட்டைகளுக்கு இடையே வைக்கப்பட்டும், தீயால் எரிக்கப்பட்டும் அழிந்துபோவதற்கும்;</p><p align="justify"><strong>பிறக்கைக்குத் தலத்திற்புக்கு இடியாமுன்</strong> ... (அப்படி அழிந்த பிறகு, அந்த உயிரானது மீண்டும்) இந்த உலகத்தில் புகுந்து பிறப்பதற்கும் (மீண்டும்) அழிவதற்கு முன்னாலே <em>(இதற்கு அடுத்து ‘தினைக்குட்’ தொடங்கி ‘அணிவோனே’ வரையில் முருகனை விளிப்பது; இங்கே நிற்கும் வாக்கியத்தைச் ‘செருக்கிச் சற்று’ என்று தொடங்கும் அடியோடு கொண்டுகூட்டிக் கொள்ள வேண்டும்.)</em></p><p align="justify"><strong>தினைக்குட் சித்திரக் கொச்சைக் குறத் தத்தைத் தனத்தை</strong> ... தினைபுனத்திலே, குழறிக் குழறி மழலை மொழிபேசும் குறக்குலத்துக் கிளியான வள்ளியின் மார்பை,</p><p align="justify"><strong>பொற்பெறச்செச்சைப் புயத்து ஒப்பித்து அணிவோனே</strong> ... அழகுவிளங்கும் வெட்சி மாலையை அணிந்த உன் தோள்களில் ஏற்று அணிந்து கொள்பவனே! (மார்புறத் தழுவுபவனே!)</p><p align="justify"><strong>செருக்கிச்சற்று உறுக்கிச்சொற்</strong>... <em>(இதற்கு முன்னே இருக்கும் ‘பிறக்கைக்கு’ என்ற அடியை இங்கே கூட்டிக் கொள்கிறோம்) </em>கர்வத்துடனும் கோபத்துடனும் பேசுபவர்களும்;<strong /></p><p align="justify"><strong>பிரட்டத்</strong> <strong>துட்டரைத்தப்பித் திரள் தப்பி</strong> ... புரட்டர்களும்; துஷ்டர்களுமான அந்தக் கூட்டத்திலிருந்து தப்பித்து விலகி,</p><p align="justify"><strong>கழற்செப்பத் திறல்தாராய்</strong> ... உன் திருவடியைப் புகழ்ந்து பாடும் வல்லமையைத் தந்தருள வேண்டும்.</p><p align="justify"><strong>பனைக்கைக் கொக்கனை</strong> ... பனைமரத்தை ஒத்த துதிக்கையை உடையவனும்; கொக்கைப் போல காத்திருந்து* தாக்குபவனுமான தாருகாசுரனை (அல்லது பனைக்கை, கொக்கன் என்று பிரித்து, தாருகாசுரன், சூரபத்மன் எனக்கொள்ள முடியும்)</p><p align="justify"><em>(தாருகாசுரன் ஆனைமுகத்தவன்; யானைக்கு  அதன் துதிக்கை பனைமரத்தை ஒத்திருப்பதால் பனைக்கை என்று பெயர்.  கொக்கு என்றால் மாமரம் என்றும் பொருளுண்டு.  மாமரமாக நின்றவன் சூரபத்மன்.  எனவே, ஆனைமுகத்தை உடைய கொக்கனான தாருகாசுரன் என்றும்; தாருகாசுரனையும் சூரபத்மனையும் என்றும் இரண்டுவிதமாகவும் பொருள் கொள்ளலாம்.)</em></p><p align="justify"><em>(ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும் வாடியிருக்குமாம் கொக்கு என்ற மூதுரை; கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன் குத்தொக்க சீர்த்த இடத்து என்ற குறள் போன்றவை குறிக்கும் காத்திருந்து சமயம் பார்த்துத் தாக்கும் குணத்தைக் கொண்ட தாருகாசுரன் என்று விரிக்கவும் இடமிருக்கிறது.)</em></p><p align="justify"><strong>தட்டுப்படக் குத்திப்பட</strong> ... தடைபட்டு அழியும்படியாக வேலாலே குத்தி அவன் இறக்கும்படியும்;</p><p align="justify"><strong>சற்பப் பணத் துட்கக் கடலது உட்கப் பொரும்வேலா</strong> ... ஆதிசேடனின்—படங்களையுடைய ஆயிரம் முடிகளும் நடுங்கும்படியும்; கடல் கலங்கும்படியும் போரிட்ட வேலவனே!</p><p align="justify"><strong>பரப்பற்றுச் சுருக்கற்றுப் பதைப்பற்றுத் திகைப்பற்று</strong> ... பேராசை ஒழிந்து; கஞ்சத்தனம் ஒழிந்து; அஞ்சிப் பதைப்புறும் தன்மை ஒழிந்து; திகைத்துக் கலங்குவது ஒழிந்து;</p><p align="justify"><strong>பலிப்பப் பத்தருக்கு ஒப்பித்தருள்வாழ்வே</strong> ... இப்படிப்பட்ட தன்மைகளெல்லாம் பக்தர்களுக்குப் பலிக்கச் செய்து அருள்பாலிக்கும் செல்வமே!</p><p align="justify"><strong>கனிக்குத் திக்கனைத்துச் சுற்றிட</strong> ... மாங்கனிக்காக எல்லாத் திசைகளிலும் சுற்றியதும்;</p><p align="justify"><strong>பச்சைக் கனப்பக்ஷிக்கு இடைப்புக்குக் களிப்புக்குத் திரிவோனே</strong> ... பச்சை வண்ணமுள்ளதும்; பெருமை நிறைந்த பட்சியுமான மயிலின்மேலே ஏறியமர்ந்து மகிழ்ச்சியோடு உலா வருபவனே!</p><p align="justify"><strong>கலிக்கு ஒப்பிற் சலிப்பற்றுக் கதிக்கு ஒத்திட்டு</strong> ... இந்தக் கலியிலே ஒப்பில்லாத தெய்வமாக விளங்கி, சற்றும் சலிக்காமல் அடியார்களுக்கு மோட்சகதியை அளிக்க உடன்பட்டவனே!</p><p align="justify"><strong>எழிற்சத்திக் கடற்கச்சிப் பதிச்சொக்கப் பெருமாளே.</strong> ... அழகு நிறைந்த சக்தி, அம்மை காமாட்சி எழுந்தருளியுளளதும் எப்போதும் கடல்போல ஒலிக்கும் ஓசை நிறைந்ததுமான காஞ்சீபுரத்தில் வீற்றிருக்கும் அழகிய பெருமாளே!</p><p align="justify"><strong><em>சுருக்க உரை</em></strong></p><p align="justify"><em>பனைமரம்போலத் துதிக்கையை உடைய தாருகாசுரனையும், மாமர வடிவத்தில் நின்ற சூரபத்மனையும் அவர்களுடைய செயல்கள் தடைப்படுமாறு குத்தி அவர்களை அழித்தும்; ஆதிசேடனுடைய ஆயிரம் படங்கொண்ட தலைகளும் கடலும் அஞ்சும்படியாகப் போரிட்ட வேலவனே!  மாங்கனிக்காக எல்லா திசைகளிலும் சுற்றி வலம்வந்ததும்; பச்சை நிறமுள்ளதும்; பெருமை வாய்ந்ததுமான மயிலாகிய பட்சியின்மேல் ஏறிக்கொண்டு மகிழ்ச்சியோடு உலா வருபவனே!  இந்தக் கலியுகத்திலே நிகரில்லாத தெய்வமாகவும்; பக்தர்களுக்கு மோட்ச கதியை அளிக்க உடன்பட்டு அதில் சலிப்பில்லாதவனாகவும் நிற்பவனே!  அழகிய சக்தியான காமாட்சியம்மை வீற்றிருப்பதும்; எப்போதும் கடல் ஒலிப்பதுபோன்ற இரைச்சல் நிறைந்ததுமான காஞ்சிமா நகரத்தில் விளங்குகின்ற அழகிய பெருமாளே!</em></p><p align="justify"><em>குழறிக் குழறிப் பேசுகின்ற குறக்குலத்துக் கிளியான வள்ளியம்மை இருக்கும் தினைப்புனத்திலே, அம்மையின் மார்பை, வெட்சிமாலையணிந்த உன் தோள்களிலே பொருந்தும்படித் தழுவிக் கொள்பவனே!</em></p><p align="justify"><em>‘எனக்குக் கொஞ்சம், உனக்குக் கொஞ்சம்’ என்று கூக்குரலெழுப்புகின்ற விலைமாதர்களுக்கு அவர்கள் வேண்டியதையெல்லாம் தங்கத் தட்டிலே வைத்துத் தரக்கூடியதும்; ஆபத்து நிறைந்ததுமான இந்தச் சிறுமை நிறைந்த உடலானது, உயிர் மாயமாய் மறைந்ததும் விறகுக் கட்டைகளுக்கு இடையில் இடப்பட்டுத் தீயால் சுடப்பட்டு அழியவும்; போன உயிரானது மீண்டும் பூமியில் பிறந்து மீண்டும் மரணமடைந்து இந்தச் சுழற்சியில் அகப்பட்டுக் கொள்ளாமலும்; அகந்தையும் கோபமும்கொண்டு பேசுகின்ற துஷ்டர்கள்; புரட்டர்களான துஷ்டர்கள் ஆகிய இவர்களின் கூட்டங்களிலிருந்து தப்பித்து விலகி, உன்னுடைய திருவடிகளையே எப்போதும் ஓதும் வல்லமையைத் தந்தருள வேண்டும்.</em></p>

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.