பகுதி - 366
திருச்செங்கட்டாங்குடி என்ற தலத்துக்கான பாடல்
நன்னிலம் ரயில் நிலையத்துக்கு அருகிலுள்ள திருச்செங்கட்டாங்குடி என்ற தலத்துக்கான பாடல் இது. திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோருடைய பாடல்பெற்ற தலம். சிறுத்தொண்ட நாயனாருடைய தலம். இப்பாடல் இறைவனிடமிருந்து உபதேசத்தைப் பெறுவதைக் கோருகிறது.
அடிக்கு ஒற்றொழித்து 49 எழுத்துகள்; ஒவ்வொரு மடக்கிலும் 2, 4, 8, 12 ஆகிய எழுத்துகள் நெடில், மற்றவை குறில்.
தந்தான தானதன தானதன தானதன
தந்தான தானதன தானதன தானதன
தந்தான தானதன தானதன தானதன - தனதான
Advertisement
வங்கார மார்பிலணி தாரொடுயர் கோடசைய
கொந்தார மாலைகுழ லாரமொடு தோள்புரள
வண்காதி லோலைகதிர் போலவொளி வீசஇதழ் - மலர்போல
மஞ்சாடு சாபநுதல் வாளனைய வேல்விழிகள்
கொஞ்சார மோககிளி யாகநகை பேசியுற
வந்தாரை வாருமிரு நீருறவெ னாசைமய - லிடுமாதர்
சங்காளர் சூதுகொலை காரர்குடி கேடர்சுழல்
சிங்கார தோளர்பண ஆசையுளர் சாதியிலர்
சண்டாளர் சீசியவர் மாயவலை யீட்டியெ - னுழலாமற்
சங்கோதை நாதமொடு கூடிவெகு மாயையிருள்
வெந்தோட மூலஅழல் வீசவுப தேசமது
தண்காதி லோதியிரு பாதமலர் சேரஅருள் - புரிவாயே
சிங்கார ரூபமயில் வாகனந மோநமென
கந்தாகு மாரசிவ தேசிகந மோநமென
சிந்தூர பார்வதிசு தாகரந மோநமென - விருதோதை
சிந்தான சோதிகதிர் வேலவந மோநமென
கங்காள வேணிகுரு வானவந மோநமென
திண்சூர ராழிமலை தூள்படவை வேலைவிடு முருகோனே
இங்கீத வேதபிர மாவைவிழ மோதியொரு
பெண்காத லோடுவன மேவிவளி நாயகியை
யின்பான தேனிரச மார்முலைவி டாதகர - மணிமார்பா
எண்டோளர் காதல்கொடு காதல்கறி யேபருகு
செங்கோடு மேவிபிர காசமயில் மேலழகொ
டென்காதல் மாலைமுடி ஆறுமுக வாவமரர் பெருமாளே.