பகுதி - 376
இப்பாடல் திருவிடைமருதூர் தலத்துக்கானது.
இப்பாடல் திருவிடைமருதூர் தலத்துக்கானது. ‘தவநெறியில் ஒழுகி வழி பண்படும் கங்கணம் சிந்தியாதோ’ என்று இதயத்தை நன்னெறியில் நிறுத்தி இறைவனிடத்தில் உள்ளம் நிலைகொண்டு நிற்கும் பேற்றைக் கேட்கிறது.
அடிக்கு ஒற்றொழித்து 52 எழுத்துகள்; தொங்கல் சீரைத் தவிர்த்த மற்ற சீர்கள் எதிலும் நெடில் பயிலவில்லை; ஒற்று சேர்த்து ஒவ்வொரு மடக்கிலும் 12, 15, 17, 20 ஆகிய எழுத்துகள் மெல்லொற்று
தனனதன தனனதன தந்தனந் தந்தனந்
தனனதன தனனதன தந்தனந் தந்தனந்
தனனதன தனனதன தந்தனந் தந்தனந் தந்ததான
Advertisement
படியையள விடுநெடிய கொண்டலுஞ் சண்டனும்
தமரசது மறையமரர் சங்கமுஞ் சம்புவும்
பரவரிய நிருபன்விர கன்சுடுஞ் சம்பனன் - செம்பொன்மேனிப்
பரமனெழில் புனையுமர வங்களுங் கங்கையுந்
திருவளரு முளரியொடு திங்களுங் கொன்றையும்
பரியகுமி ழறுகுகன தும்பையுஞ் செம்பையுந் - துன்றுமூலச்
சடைமுடியி லணியுநல சங்கரன் கும்பிடுங்
குமரனறு முகவன்மது ரந்தருஞ் செஞ்சொலன்
சரவணையில் வருமுதலி கொந்தகன் கந்தனென - றுய்ந்துபாடித்
தணியவொலி புகலும்வித மொன்றிலுஞ் சென்றிலன்
பகிரவொரு தினையளவு பண்புகொண் டண்டிலன்
தவநெறியி லொழுகிவழி பண்படுங் கங்கணஞ் - சிந்தியாதோ
கடுகுபொடி தவிடுபட மந்திரந் தந்திரம்
பயிலவரு நிருதருட லம்பிளந் தம்பரங்
கதறிவெகு குருதிநதி பொங்கிடுஞ்சம்ப்ரமங் - கண்டுசேரக்
கழுகுநரி கொடிகருட னங்கெழுந் தெங்குநின்
றலகைபல திமிலைகொடு தந்தனந் தந்தனங்
கருதியிசை பொசியுநசை கண்டுகண் டின்புறுந் - துங்கவேலா
அடல்புனையு மிடைமருதில் வந்திணங் குங்குணம்
பெரியகுரு பரகுமர சிந்துரஞ் சென்றடங்
கடவிதனி லுறைகுமரி சந்திலங் குந்தனம் - தங்குமார்பா
அருணமணி வெயிலிலகு தண்டையம் பங்கயங்
கருணைபொழி வனகழிலி லந்தமுந் தம்பமென்
றழகுபெற நெறிவருடி யண்டருந் தொண்டுறுந் தம்பிரானே.