பகுதி - 362
இந்தத் திருப்புகழ் திருத்தணித் தலத்துக்கானது.
இறைவன் திருவடியில் மனமுருகி நிற்பதற்கான இந்தத் திருப்புகழ் திருத்தணித் தலத்துக்கானது. ஓசைச் சிறப்பு மிக்கது; சற்றே நீண்ட சந்த அமைப்பை உடையது. அடிக்கு ஒற்றொழித்து 46 எழுத்துகள்; தொங்கல் சீரில் மட்டும் நெடில் பயில்கிறது; மற்ற அத்தனை எழுத்துகளும் குற்றெழுத்துகள். ஒற்றைச் சேர்த்து ஒவ்வொரு மடக்கிலும் மூன்றாம் எழுத்தும் ஆறாம் எழுத்தும் வல்லொற்று. மெல்லொற்று இல்லாத பாடல்.
தனத்த தத்தன தனதன தனதன
தனத்த தத்தன தனதன தனதன
Advertisement
தனத்த தத்தன தனதன தனதன தனதான
சினத்தி லத்தினை சிறுமண லளவுடர்
செறித்த தெத்தனை சிலைகட லினிலுயிர்
செனித்த தெத்தனை திரள்கய லெனபல வதுபோதா
செமித்த தெத்தனை மலைசுனை யுலகிடை
செழித்த தெத்தனை சிறுதன மயல்கொடு
செடத்தி லெத்தனை நமனுயிர் பறிகொள்வ தளவேதோ
மனத்தி லெத்தனை நினைகவ டுகள்குடி
கெடுத்த தெத்தனை மிருகம தெனவுயிர்
வதைத்த தெத்தனை யளவிலை விதிகர மொழியாமல்
வகுத்த தெத்தனை மசகனை முருடனை
மடைக்கு லத்தனை மதியழி விரகனை
மலர்ப்ப தத்தினி லுருகவு மினியருள் புரிவாயே
தனத்த னத்தன தனதன தனதன
திமித்தி மித்திமி திமிதிமி திமிதிமி
தகுத்த குத்தகு தகுதகு தகுதகு தகுதீதோ
தரித்த ரித்தரி தரிரிரி ரிரிரிரி
தடுட்டு டுட்டுடு டடுடுடு டுடுடுடு
தமித்த மத்தள தமருக விருதொலி கடல்போலச்
சினத்த மர்க்கள செருதிகழ் குருதிய
திமிழ்த்தி டக்கரி யசுரர்கள் பரிசிலை
தெறித்தி டக்கழு நரிதின நிணமிசை பொரும்வேலா
செழிக்கு முத்தம சிவசர ணர்கள்தவ
முநிக்க ணத்தவர் மதுமலர் கொடுபணி
திருத்த ணிப்பதி மருவிய குறமகள் பெருமாளே.