பகுதி - 620
பாடல்பெற்ற தலம்
மாசுகள் அறக் கோரும் இப்பாடல் திலதைப்பதிக்கு உரியது. திலதைப்பதி என்பது தற்காலத்தில் கோயிற்பத்து என்ற பெயரால் அறியப்படுகிறது. தஞ்சையில் பேரளம் என்ற ஊருக்கு அருகே இருக்கிறது. திருஞான சம்பந்த சுவாமிகளின் பாடல்பெற்ற தலம். இப்பாடலின் முதலடியை ‘இட்டு உ(ண்)ணல் ஏய்தரும் காலம் இறையத்தனையோ அதுதானும் இலை’ என்று கொண்டுகூட்டிக்கொள்ள வேண்டும்.
தொங்கல் சீரை ஒழித்து அடிக்கு இரண்டே சீர்களை உடைய சிறிய பாடல். அடிக்கு ஒற்றொழித்து 20 எழுத்துகளைக் கொண்ட பாடல். முதற் சீரில் மூன்று குற்றெழுத்துகளும்; இரண்டாம் சீரில் இரண்டு குறில், ஒரு நெடில் என மூன்றெழுத்துகளும் அமைந்துள்ளன.
தனனத் தனனா தனதான
தனனத் தனனா தனதான
Advertisement
இறையத் தனையோ அதுதானும்
இலையிட் டுணலேய் தருகாலம்
அறையிற் பெரிதா மலமாயை
அலையப் படுமா றினியாமோ
மறையத் தனைமா சிறைசாலை
வழியுய்த் துயர்வா னுறுதேவர்
சிறையைத் தவிரா விடும்வேலா
திலதைப் பதிவாழ் பெருமாளே.